Thursday, June 14, 2012

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
கலைஞர் உரை:
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

 பெரியார் உரைஎழுதி இருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும்

புராணங்களில் வரும் தேவர்கள் கயவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.