Thursday, December 19, 2013

இந்தியாவில் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம்

    இந்தியர்கள் ஏன் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கான கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்தக்கோரி போராடக்கூடாது. அப்படி செய்தாலே இந்தியாவில் வருமை ஒழிந்துவிடுமே.  ஒருமணி நேர ஊதியத்தில் குறந்தபட்சம் ஒருவேலை உணவுக்கு போதியாளவு இருக்கவேண்டும். ஊதியம் குறித்த நேரத்தில் தவறாமல் வழங்கப்படவேண்டும். ஊதிய ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து ஒரு வார காலத்திற்க்குல் அரசு ஊதியத்தினை பெற்றுத்தரவேண்டும்.

Saturday, December 14, 2013

முகனூலில் பார்த்த மாங்காய் பதிவு.


இந்த பதிவ படிச்சி பாருங்க இவங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.




"தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்ப்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம்.

அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்த கூடாது?

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாக பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாய துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க வேண்டும்.

• இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.

• விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும்.

• இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும்.

• ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த வேண்டும்.

• இயற்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும். இவை நடந்தால்?

• நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும்

• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும்

• விவசாயம் அழியாமல் பாதுகாக்க முடியும்

• நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும்

• வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.

இன்னும் பல…………………………………….. ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம் செய்ய முடியாதா??

- ஷங்கர் சிவசைலம்
தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்ப்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம். 

அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்த கூடாது? 

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாக பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாய துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க வேண்டும். 

• இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்.

• விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும். 

• இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும்.

• ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த வேண்டும். 

• இயற்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும். இவை நடந்தால்? 

• நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும் 

• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் 

• விவசாயம் அழியாமல் பாதுகாக்க முடியும் 

• நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும் 

• வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும்.

இன்னும் பல…………………………………….. ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம் செய்ய முடியாதா??

- ஷங்கர் சிவசைலம்
 கமெண்ட் போட்டவங்க எல்லாரையும் நெனைக்கும்போது அப்படியே புல்லரிக்குது.  2020 ல இந்தியா வல்லராசா ஆயிடும்டோய்!