Thursday, January 31, 2008

கடவுள் அற்புதமானவர்.

கடவுள் மிகமேன்மையான ஆற்றலையும் அறிவையும் பண்புகளையும் பெற்றிருக்கிறார். ஆனால் அவர் மனிதர்களின் குணங்களைப் பெற்றிருக்கவில்லை மிகவும் அற்புதமான குணங்களைப் பெற்றிருக்கிறார் அவர் யாரிடம் இருந்தும் எதையும் எதிர்ப்பார்ப்பது இல்லை அனைத்துமே அவருடையது. அற்பர்களாகிய மனிதர்கள்தான் ஒவ்வொருவரும் தன்குணத்தையே கடவுளின் குணமாக கருதுகின்றனர். கடவுளின் எண்ணங்களும் குறிக்கோள்களும் உயர்ந்தவை ஆதலினால் அவரின் செயல்கள் உயர்ந்தவற்றை நோக்கியே சிறப்பித்துக்கொண்டிருக்கின்றன. கடவுள் மனிதனின் வடிவமும் அல்ல அவருக்கு இந்த சாதாரண அற்பவடிவில் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

அண்ட சராசரங்களுக்கும் அதிபதியான கடவுள் இந்த சின்னஞ்சிறிய கோளமான பூமியின் மீதுமட்டும் கவனம் செலுத்தவும் இந்த அற்பர்களை ஆளுமைசெய்யவும் கடவுள் ஒன்றும் அவ்வளவு கீழ்த்தரமானவர் அல்ல. மனிதர்களின் மொழி கடவுளுக்கு புரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை மற்ற விலங்கினங்களின் மொழி எப்படி நமக்கு விளங்காமல் போகிறதோ நாம் அதன்மீது கவனம் செலுத்தாமல் அலட்சியம் செய்கிறோமோ அப்படியே மனிதர்களையும் கடவுள் அனைத்து நிகழ்வுகளையும் கண்கானிக்கவேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரம் அற்று கட்டிவைத்திருக்கும் மாட்டைப்பார்த்து நமக்கு அதன் சுதந்திரத்தைப் பற்றிய எண்ணமே இல்லாதபோது நம்முடைய ஒவ்வொரு சிறுதேவைகளையும் இன்பங்களையும் கடவுள்தான் தீர்மானிக்கிறார் என்று நினைப்பது எவ்வளவு பெறிய முட்டாள்தனம்.

கடவுள் சோதிக்கிறாராம் ஒரே அலுவலகத்தில் வேலைபார்க்கும் கடைநிலை ஊழியர்களைக்கூட மனிதர்களாகப் பார்க்கமுடியாத மேலாளர்கள் இருக்கும்போது அற்பத்தனமான உங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து அவரது அரிவை வளர்த்துக்கொள்ள அவறென்ன அரிவற்றவரா என்ன எல்லாம் தெறிந்தவர் அனைத்தையும் அறிந்தவர். மனிதன்தான் கடவுளுக்கு தன்னைப்போலவே உருவம் கற்பித்துக்கொண்டு தன்னைபோல் குணங்களை அவருக்கும் இருப்பதாக பாவித்துக்கொண்டு அவரைப்புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறான் போற்றிபுகழ்ந்துகொண்டிருக்கிறான். அவரை ஒரு ஒரு உருவத்தினுள் அடைத்துப் பார்க்கமுடியாத அரூபமானவர் அவர் ஒன்றும் மனிதரைப்போல் தற்புகழ்ச்சிகாரரும் அல்ல. பக்தர்கள் என்றுகூறிக்கொண்டு இவர்கள் செய்யும் நேர்த்திக்கடன் என்ற செயலைக்கண்டால் பூமியில் இவ்வளவு பைத்தியக்காரர்களா என்று நினைத்துக்கொள்வார்.

கடவுள் அனைத்தையும் நொடிப்பொழுதில் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் அப்படி இருக்கும்போது அவதாரங்களை எடுத்து இந்த அற்பர்களுக்கு எதையும் கற்பிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. பசு ஈன்ற கன்று அரைமனி நேரத்தில் எப்படி தானாகத்தேடி பசிக்கு பால் குடிப்பதர்க்கான அறிவைக் கன்றுக்குப் புகட்டினாரோ அப்படியே அவசியத்தேவைகளை மனிதர்களுக்கும் இயற்கையிலேயே புகுத்திவிட்டு தானியக்கம் அடையச்செய்துவிட்டு அவர் அடுத்தவேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். தன்னைவிட கீழானவன் என்னதான் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சி ஏற்புடையதாகாது ஒருவேலை கடவுள் மனிதர்களை கவனித்துக்கொண்டே இருந்தாலும் மனிதர்களின் நச்சரிப்பினால் அவருக்கு எரிச்சல்தான் வரும்.

நம் மக்கள் கடவுளிடம் பிச்சைக்கேட்டு கடவுளுக்கே பிச்சைபோடுகிறார்கள். கடவுளுக்கு யாரும் எதுவும் கொடுக்கத்தேவை இல்லை அனைத்துமே அவருடையதுதான் நாம் யார் அவருக்கே பிச்சை போட. நமக்குத்தேவையான அனைத்தையும் கடவுள் உலகம்முழுவதிலும் வாரி இறைத்துச்சென்றுள்ளார் நாம் அவர் இறைத்ததைத்தான் தேடவேண்டிமோ ஒழிய இறைத்தவனை( இறைவனை ) தேடுகிறோம்.

"இறைந்துகிடப்பதைத்தேடுங்கள் இறைவனைத்தேடாதீர்கள்".

நாம் பயனுற வேண்டும் நமக்காக சில ஆலோசனைகளும் வேண்டும்.

"திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது"
இது எப்படி சரியான கூற்றாய் இருக்கமுடியும். அனைவருக்கும் நன்கு பரிட்சயமான ஒருவர் அல்லது மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற ஒருவர் எதைக் கூறினாலும் நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். நாம் சற்று சிந்தித்தாகவேண்டும் திருடன் எப்போது திருந்துவது திருடு எப்போது ஒழிவது மக்களுக்காக கருத்து சொல்கிறேன் என்று தீர்வைக்கூறாமல் குழப்பிவிடுகிறார்கள். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் முடிவு என்று ஒன்று இருக்கும் பிரச்சனை என்றால் நிச்சயம் அதர்க்கான தீர்வு ஒன்று இருந்தே தீரும்.

நாம் இப்போதாவது இதர்க்கான ஒரு தீர்வைக்கான முயல்வோம் எனக்குத்தெரிந்த ஒர்தீர்வு வாய்ப்புக்கள் இல்லாமல் செய்வதுஒன்றே சரியான தீர்வாக இருக்கமுடியும். திருடன் திருடுவதர்க்கான வாய்ப்புகளில் முதல் வாய்ப்பாக இருப்பது நம்மிடம் இருப்பதை அனைவருக்கும் தெரியும்படி வைத்திருப்பது அல்லது விளம்பரப்படுத்துவது. அடுத்து அவன் திருடிய பொருளை விற்க்கும் சந்தையை தடை செய்யவேண்டும் உதாரணத்திற்கு அடகு கடைகள் திருட்டு பொருட்களுக்கு எந்தவித அடையாளச்சான்றும் இல்லாமல் வாங்கிக்கொள்வது. வருவாயைத்தெரிவிக்காமல் செலவு செய்யும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யவேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை அடுத்தவருக்கு தேவை இருக்கும் போது பதுக்கி வைத்திருப்பது.

சாதாரண மக்களுக்கும் வருவாய்க்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் அவர்களுக்கான வழிகாட்டுதலையும் கொடுக்கவேண்டும். அனைவரும் விலைகுறைவாக கிடைக்கிறது என்று திருட்டுப்பொருட்களையோ அல்லது வரிஏய்ப்பு செய்தோ வாங்காதீர்கள் அவை சுற்றிவளைத்து நம்மையே பாதிக்கும் நமது உடமைகள் களவுபோகவும் ஏதோ ஒருவகையில் நாமே காரணமாகிவிடுவோம். பகட்டாக இருப்பதை தவிர்க்கவேண்டும் அது அடுத்தவர்கண்ணை உறுத்தும் அதைப்பெற இயலாதவர்கள் மாற்றுவழியாக திருட நினைப்பர். அனைத்துப் பொருட்களையும் சரியான பாதுகாப்பை உருதிசெய்யவேண்டும் அடுத்தவர் இல்லாமையை நம் வல்லமையினால் எள்ளி நகைக்கப்பதும் பணத்தின் அளவுகளால் மக்களை மதிப்பிடுவதும் மதிப்பளிப்பதும் இதர்க்காண காரணங்களாக இருக்கும்.

Thursday, January 24, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 9

அரசாங்க வேலை பற்றிய வெளிப்பாடு

மக்கள் அரசாங்க உத்தியோகம் கிடைக்கவேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள் எதற்காக அவர்களுக்கு அரசாங்க வேலை தேவை. முதலில் நிரந்தரமான வேலை அடுத்து பென்ஷன் குறைந்த வேலைப்பளு தேவையான அளவுக்கு மேல் விடுப்புகள். நமது மக்களிடத்தில் ஒரு சொல் வழக்கு இருக்கிறது " கழுதை மேய்த்தாலும் கவர்ன்மென்ட் கழுதை மேய்க்கவேண்டும் " வேண்டுமானால் ஒரு சோதனை செய்து பார்க்கலாம் அரசாங்கம் ஒரு 100 கழுதை வாங்கி விட்டு ஆளெடுப்பு நடத்திப் எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்க்கலாம். கட்டாயம் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டே வருவார்கள் என்றே நினைக்கிறேன் இதர்க்கும் லஞ்சம் போட்டி போடலாம். இவ்வளவு நன்மைகள் உத்திரவாதத்துடன் கிடைக்கிறது என்றால் தனக்கு வேலையின் மீது எவ்வளவு அக்கரை இருக்கவேண்டும் ஆனால் இல்லை காரணம் ஒன்றுமே செய்யாத ஆசாமிகள்.

அரசு உத்தியோகம் கிடைத்தவுடன் அவன் யாருக்கு பனிசெய்ய வேண்டும் அவனுக்கு முதலாளி யார்? இங்கு தான் அந்த முரன் ஆரம்பமாகிறது. அரசாங்க வேலை செய்பவனுக்கு சம்பளம்(பணம்) கொடுப்பது யார்? அரசாங்கம். அப்படியானால் அரசாங்கத்திற்க்கு பணம் கொடுப்பது யார்? மக்கள். அப்படி யானால் அரசு உத்தியோகம் பார்ப்பவனுக்கு முதலாலி யார்? மக்கள் தானே. அப்படியானால் யார் யாருக்கு மரியாதை அளிக்கவேண்டும் கட்டுப்படவேண்டும்? அரசு ஊழியன் மக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் மக்கள் சொல்வதை கேட்க்கவேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன நிலைமையே தலை கீழ் முதலாளி பனிபுரியும் பனியாளனுக்கு கீழ்ப்படியவேண்டுமாம் இது எப்பேர் பட்டமுரன்பாடு இது தானே இன்றைய நிகழ்வாக இருக்கிறது. இந்த பதிவு என்ன சுற்றிவளைத்துப்போகிறது என்று பார்க்கிரீர்களா இந்த இடத்தில் நேருக்கு நேர் பார்த்தால் எதுவும் தெறியாது ஏதோஒன்று கண்ணை மறைக்கும் எனவே தான் மேலே இத்தனை வினாக்கள் விடைகள்.

இப்போது நம் மக்கள் யாவரும் அரசு வேலைகிடைத்தால் அது ஒரு வேலை என்றெல்லாம் நினைப்பதில்லை வேலை என்று அரசாங்கம் பெயர் வைத்திருப்பதால் தான் வேலை என்றாவது கூறுகிறார்கள். அது என்னவோ கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறார்கள் மாதா மாதம் வங்கி கணக்கை துரந்து பணம் கொட்டுகிற வரம். அரசாங்கம் என்பதும் ஒரு கடவுள் போலவே நினைக்கிறார்கள். வித விதமாக பிரார்த்தனை செய்தால் வரம் கூட்டிகொடுக்கப்படுகிறது இல்லை இல்லை வரம் கூடுதல் பலம் பெருகிறது அந்த விதவிதமான் பிரார்த்தனைகள் தான் போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் இவையெல்லாம். கடவுள் வரம் பெற்றவர்கள் ஆகையாள் இவர்களெல்லாம் ஒரு மினி கடவுளர்களாகிவிட்டதாக என்னிக் கொள்கிறார்கள்.

பொதுமக்கள் வழியில் பார்த்தால் உடனே அவருக்கு வணங்கவேண்டும் (வணக்கம் சொல்லவேண்டும்) டீ கடையிலும் டிபன் கடையிலும் பார்த்தால் உடனே அபிசேகம் ஆரதனை செய்யவேண்டும் ( அதாவது அவற்றை எல்லாம் வாங்கி கொடுக்கவேண்டும்). அலுவலகத்தில் பார்த்தால் காணிக்கை வழங்கவேண்டும் (லஞ்சம் கொடுக்கவேண்டும்). இப்படி எல்லாம் செய்தால்தான் பொதுமக்களான பக்த்தர்களுக்கு அவர்களுடைய வேலை நடைபெற ( வேண்டுதல் நிறைவேற) ஆசி வழங்கப்படும். இன்றைய அரசாங்க உத்தியோகத்தின் நிலை இப்படிதானே உள்ளது இவையெல்லாம் எப்படி வந்தது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து யார் அரசு பனிகளில் இருந்தார்களோ அவர்களால் தான் இந்த நிலைமை இருந்து வந்திருக்கிறது. இப்போது யார் காரணம் என்று புரிந்திருக்கும்.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8

அராசாங்கம் பற்றிய மக்களின் மனநிலை.

மக்கள் எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு அரசே காரனம் என்றும் மேலும் அரசேப் பொருப்பேர்க்கவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சாலையோரத்தில் குடியிருப்பவன் முதல் பெரியப் பணக்காரர்கள் வறை இதைத்தான் சொல்லுகிறார்கள். குடிக்கின்ற தண்ணீர் முதல் புதைக்கின்ற இடுகாடு வரை எதற்கெடுத்தாலும் பிரச்சனைகள் இந்த அரசின் ஆட்சியில் இதுசரியில்லை அதுசரியில்லை முழுசுதந்திரமில்லை பாதுகாப்பில்லை என்கிறார்கள். முதலில் முழு சுதந்திரம் என்றால் என்ன முழுபாதுகாப்பு என்றால் என்ன என்று யாரும் சிந்தித்து பார்க்கும் மனநிலையில் இல்லை.

ஒருவனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டுமானால் அவனை அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்தகூடாது அப்படியானால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செயாமலும் இருக்கலாம் அது அவன் விருப்பமாக இருக்கும். கொலை செய்தாலும் திருடினாலும் அடித்தாலும் ஏனென்று யாரும் கேட்க்கமுடியாத நிலைதான் முழுசுதந்திரம்.
அடுத்து முழு பாதுகாப்பு ஒருவனுக்கு வழங்கவேண்டுமானால் அவன் முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் குடிக்கும் தண்ணீர் முதல் படுக்கும் படுக்கைவரை என்ன தேவையானாலும் எதை செய்யவேண்டுமானாலும் அரசின் வழிகாட்டுதலில் இருந்து ஒரு இழையும் பிசகாமல் இருக்கவேண்டும் அப்போதுதான் முழு பாதுகாப்புக் கிடைக்கும். இப்போது இவையிரண்டும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்றவை ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் பார்க்கமுடியும் இரண்டையும் ஒருசேரப்பார்ப்பது இயலாத காரியம். சிலர் கேட்கலாம் கண்ணாடியில் பார்க்கலாம் என்று கண்ணாடியில் தோன்றுவது மாயபிம்பம்தானே அப்படியானால் நீங்களும் அவ்வாழ்க்கையை கணவினில் மட்டுமே அனுபவிக்கமுடியும் உண்மையில் அல்ல.

இப்போது நமக்கு எதுதேவை சுதந்திரமா இல்லை பாதுகாப்பா ஒருவேலை இரண்டும் தேவை எனில் 50% சுதந்திரம் 50% பாதுகாப்பு என வைத்துக்கொள்வோமா. அப்படியெனில் நாணயத்தை செங்குத்தாக வைத்துப்பார்ப்பதை போன்றுதான் இருக்கும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லை சுதந்திரமாக இருக்கிறோம என்று நமக்கேத் தெரியாது அதனை புரிந்துகொள்ளவே சிக்கலாக இருக்கும். இந்த நாணயம் லேசாக ஒருபுறம் சாய்ந்திருந்தாலும் ஒருப்பக்கம் தெரியும் மறுப்பக்கம் தெரியாது இதனை அவரவர் முடிவுக்கே விட்டுவிட்டாலும் எது எத்தனைசதம் வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனப்பார்ப்போம். உணக்கு துப்பாக்கி வைத்திருக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு உணதுபாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் என்றால் வடிவேல் சொல்வதுபோல் " இது சின்ன பிள்ளத்தனமா இல்ல இருக்கு ".

இப்போது நம்மிடமுள்ள முரண்பாடுகளைப் பார்ப்போம் ஒருவன் மற்றொருவனை அடித்தால் அடிவாங்கியவன் பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா. சரி அடிவாங்கியவன் பாதுகாப்பாக இல்லை என்று கூறினால் ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடித்தால் அது பாதுகாப்பா இல்லையா என்றால் ஆமென்பர். இது தான் அந்த பெரிய முரண்பாடு நான் பெற்றக்குழந்தை அதற்கு அனைத்து செலவினங்களையும் சலுகைகளையும் அளிக்கும் நான் அந்தக் குழந்தையை அடிக்க உரிமையுண்டு என்றால். உங்களைப் பாதுகாத்து உங்களுக்குத் தேவையான வற்றையெல்லாம் கொடுக்கும் அரசு உங்களை அலைகழிக்கடித்தால் நீங்கள் என்னசொல்வீர்கள் அரசு என்னை அடிமையாக நடத்துகிறது என்றுதானே. அப்படி இருக்கையில் உங்கள்குழந்தையை மட்டும் நீங்கள் அடிமையாக நடத்துகிறீர்கள் என்றுதானே அர்த்தம் நீங்கள் அடிக்கும்போது குழந்தைகளுக்கு என்ன சுகமாகவா இருக்கும். இது என் சுதந்திரம் என்றால் குழந்தைகளின் சுதந்திரம் என்ன ஆணது அந்தக் குழந்தை எந்த உடை உடுத்தவேண்டும் என்னப்படிக்கவேண்டும் என்னச்சாப்பிடவேண்டும் யாரைத் திருமணம் செய்துக்கொள்வது என்பதுவரை உங்களுக்கு பிடித்தவற்றையே பிள்ளைகள் மீது தினித்தால் அந்த இளம் பிஞ்சுகளின் கணவு அடியோடு பழாய்போய்விடுகிறது. அவர்களுக்கு உலகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்று அவர்களுக்கு எதையும் தெரிந்துகொள்ளவிடாமலே செய்துவிடுகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் செய்து விட்டு அரசாங்கம் சரியில்லை என்பது நாமும் அரசாங்கத்தின் ஒரு அங்கம் தானே நாம் சரியாக இருக்கிறோமா இல்லை. தாங்கள் விருப்பப்பட்ட படிப்புகளை அரசினர் கல்லூரிகளில் சீட் இல்லை என்றாலும் தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்கவைத்துவிட்டு அந்த படிப்பிற்க்கு தகுதியான வேலைவாய்ப்பினை அரசு ஏற்ப்படுத்தி தரவேண்டுமாம். இந்து இடுக்கு பொறம்போகு போன்ற வசதியற்ற இடங்களில் வீடுகளை கட்டிக்கொண்டு அரசு சரியான வசதி செய்து தரவில்லை குடி நீர் வசதியில்லை சாக்கடை வசதி இல்லை என்று சொல்வது முடியாது என்றாலும் லஞ்சம் கொடுத்தாவது அதை சாதித்துவிடுவது என்னே சாதனை. எல்லாரும் நகரங்களை நோக்கி குடியேறிவிட்டு நெறிசல் பற்றாகுறை மாசு பட்டுவிட்டது என்று அரசினை கடிந்து கொல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது.

சாலை நெறிசல் கட்டிடங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தவும் மக்கள் விடமாட்டார்கள் எத்தனைபேர் ரோட்டில் அடிபட்டு செத்தாலும் பரவாயில்லை நடுரோட்டில் இருக்கும் கோவில்களை அகற்றகூடாது மசூதிகளை அகற்றகூடாது என்றால் ஓட்டுவாங்கியதற்க்காக அமைச்சர்களின் தலைமீதா வாகணத்தை ஓட்டுவது அரசு என்றால் அலாவுதீனின் அடிமை பூதம் என்று நினைக்கிறார்கள் கேட்டதெல்லாம் கொடுக்க. நீங்கள் கேட்ப்பதெல்லாம் வெளிநாட்டில் இருந்து பெறவேண்டுமானால் நமது நாட்டை உலகவங்கியில் அடகுவைத்துதான் பெறமுடியும் அதற்கு ஈடாக உலகவங்கியும் சேர்ந்து நமது நாட்டை ஆட்ச்சி செய்கிறது நமக்குதேவயானவற்றை நாமே செய்துகொண்டால் நமக்கேன் இந்த பிரச்சனை.

Tuesday, January 22, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 7

பாராட்டு புகழ்ச்சி மீதான மனநிலை
எல்லா மக்களுமே தன்னை யாவரும் பாராட்டவேண்டும் புகழவேண்டும் என்றே நினைக்கிறார்கள், இது சிறுவயதிலிருந்தே அனைவருக்கும் மனதில் ஊரிப்போய்விட்ட ஒரு மனப்பான்மையாகும். தான் எதையாவது செய்யும்போது ஒருவர் பாராட்டினால் அந்த செயலை அவன் மருபடியும் செய்து மீண்டும் பாராட்டை பெறவேண்டும் என்பதர்க்காக ஒருபடி மேலே போய் அதே வேலையை மேலும் நன்றாக செய்கிறான். பாராட்டுதல் என்பது ஒரு நல்ல விஷயம் தான் ஆனால் அந்த பாராட்டு யாரிடம் இருந்து கிடைக்கிறது எந்த செயலுக்காக கிடைக்கிறது எந்த சூழ்நிலையில் கிடைகிறது எப்படி கிடைக்கிறது என்பதை பொருத்து அது நன்மையா அல்லது தீமையா என்று தீர்மானிக்கவேண்டும்.

புகழ்ச்சி இது தான் அனைவருக்கும் மலிவாக கிடைக்ககூடிய ஒன்று. ஒருவர் தன்னை பற்றி புகழும் போது தன்னையே மறந்துவிடுகிறார்கள் இந்த புகழ்ச்சிதான் மிகவும் ஆபத்தான ஒன்று. புகழ்ச்சிக்கு அடிமையாவது மது சூதுக்கு அடிமையாவதைவிட மோசமான ஒன்று,தன்னை மயக்கபோதையின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகிறது.

ஒருவன் ஒரு பனியை சிறப்பாக செய்கிறான் என்றால் அவனை அப்போதே பாராட்ட வேண்டும் அத்துடன் விட்டு அடுத்தமுறை அவன் வேறொரு பனியை சிறப்பாகச் செய்யும்போது பாராட்டவேண்டும். அப்படி செய்வோமானால் அவனுடைய திறமை வேலையின் வெளிப்பாடு அதிகரிக்கும் வேலையின் மீதும் செயலின்மீதும் கவனம் ஈர்க்கும் மீண்டும் மீண்டும் தமது முதலாளியிடமோ அல்லது மேலாளரிடமோ பாராட்டை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தமது பனியை சிறப்பாக செய்வான். அதே நபரை பாராட்டகூடாத நேரம் ஒன்று உண்டு என்னவெனில் சகதொழிலாலர்கள் முன்னிலையில் அனைவரையும் கூட்டிவைத்து ஒருவனை மட்டும் பாராட்டக்கூடாது விழாக்கலில் ஒருவனை அல்லது ஒருசிலரை மட்டும் பாராட்டக்கூடாது. அப்படி செய்வோமானால் சக தொழிளாளர் பனியாளர் மானவர்கள் யாராக இருந்தாலும் பாராட்டப்பட்டவன் மீதும் பாராட்டியவன் மீதும் ஒரு காழ்ப்புணர்ச்சி ஏற்படும் அதனால் வேலைத்திறன் குறையும் பிரச்சினைகள் சிக்கல்கல் என முளைத்துக்கொள்ளும்.

எதிர்மறை செயலை செய்தவனையும் கொடுஞ்செயல் தீயசெயல் செய்தவனையும் அவன் திறமையையும் தீரச்செயலையும் போற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவன் இல்லாத இடங்களில் கூட பாராட்டக்கூடாது. அது தான் மிகக் கொடுமையான எதிர்வினைகளை உண்டுபன்னும் அந்த செயலை காதில் கேட்டால் செய்தவன் தான் தப்புசெய்திருப்பதைகூட நல்லது செய்ததாக நினைத்துக்கொள்வான் அவன் செயலை கண்டித்து இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று வேறொருவர் அறிவுறுத்தினால் தமது பாராட்டு புகழ் வீரதீர செயல் கண்டு பொறாமை படுவதாக எண்ணிக்கொள்வான். அவன் இல்லாத நேரத்தில் கூறினாலும் அதை அருகில் இருந்து கேட்க்கும் வேறு ஒரு நபர் தாமும் இது போல ஏன் செய்யக்கூடாது அப்படி செய்தால் மக்களும் நம்மை பாராட்டுவார்களே என்ற எதிர்மறை எண்ணம் உருவாகிவிடும் இது தான் தீவிரவாதமும் ரவுடியிசமும் தலைதூக்க காரனமாக இருக்கிறது.

படிக்கும் குழந்தைகளை அவ்வப்போது பாராட்டுங்கள் அப்போது தான் படிப்பின்மீது அவர்களுக்கு ஆர்வமும் ஆதரவும் தோன்றும் ஆனால் அனைத்து மானவர்கள் முன்னிலையிலும் பாராட்டாதீர்கள். அது மற்ற மானவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்திவிடும். குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களையும் முன்பை விட ஒரு மதிப்பென் கூடுதலாக எடுத்தாலும் ஏதாவது ஒன்றை நன்றாக செய்தாலும் உடனே அந்த குழந்தை மற்றும் மாணவர்களே அப்போதே பாராட்டுங்கள். ஒரு போதும் ஒருவனை ஒப்பிட்டு அடுத்தவனை பாராட்டவோ அல்லது இழுக்கு செய்ய (இகழவோ) கூடாது அது அந்த குழந்தை அல்லது மானவனின் மனதில் ஒர் எதிர்மறை என்னத்தையும் வெறுப்பையும் உருவாக்கிவிடும். எந்த குழந்தையும் திட்டுவதாலோ அடிப்பதாலோ நன்றாக படிக்கவைக்க அல்லது திருத்தவோ முடியாது. முறையான சரியான இடத்தில் சரியான தருனத்தில் பாராட்டி சாதிக்கமுடியும்.

ஒருவனை பணக்காரன் என்பதாலும் அவன் பதவியில் இருக்கிறான் என்பதாலும் எந்த காரணமும் இன்றிபுகழ்வது என்பது ஒரு வேடிக்கையான் வினோதமான விஷயம். ஆனால் புகழ்பவன் இவனிடம் இருந்து ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்துதான் புகழ்கிறான் இதனை யாரும் முதலில் அறிந்திருப்பதில்லை அவன் எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லை எனில் பின்னால் நின்று ஏசுவான். புகழ்ச்சிக்கு அடிமையானவன் தம்மை எப்போதும் யாராவது புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பான் அதனால் புகழ்ந்தவன் இகழ்ந்தால் இவனுக்கு மனம் உறுத்தலாகிவிடும். புகழ்ந்தவனை திருப்தி படுத்த அவனிடம் இருந்து மீண்டும் புகழ்ச்சி பெற அவன் எதிர் பார்த்து வந்த தேவையை பூர்த்தி செய்தே ஆகவேண்டிய கட்டாயம் பணமாக இருக்கலாம் பதவியை பயன் படுத்திக் குறுக்குவழி சட்டத்திற்க்கு புறம்பாக ஏதாவது ஒன்றை செய்ய நேர்கிறது. இதனால் அவன் பணத்துக்கும் பதவிக்கும் கேடுவிளைகிறது.

புகழ்ந்து புகழ்ந்து அவனை புகழ் மயக்கத்தின் உச்சிக்கே கொண்டுசென்று சொத்துக்களையும் பணத்தையும் அபகரிக்கவும் செய்வார்கள். எனவே புகழ் என்பது ஒரு மோசமான கொடி செயல் அதர்க்கு ஒருபோதும் யாரும் அடிமையாகாதீர்கள்.

இவைகளே பாராட்டு புகழ்ச்சிப் பற்றிய மக்களின் பொதுவான மன நிலையாக காணப்படுகிறது.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 6

சொல்வன்மை
மக்களின் மனதில் என்றுமே எதிர்மறையான செயல்களின் மீதே நாட்டம் அதிகரித்து காணப்படுகிறது உதாரனமாக ஒருவனை அதைப் பார்க்காதே இதைப்பார்க்காதேஎன்று சொன்னால் அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். எதை மூடிவைத்தாலும் அதனுள் என்ன இருக்கும் என்று பார்க்கத்தோன்றும் அது சிறிய செயலாக எளிமையாக இருக்கும்போது அதன்மீது நாட்டம் அனைவருக்குமே எளிதில்வருகிறது.
புகை பிடிக்காதே அது உடல் நலத்துக்கு கேடு என்று சொல்வதுகூட ஒருவகை விளம்பரம்போலத்தான் புகைபிடித்தால் என்னதான் ஆகும் எத்தனையோபேர் புகைக்கிறார்களே கேடு பெரிய அளவு என்றால் யாரும் செய்யமாட்டார்களே என்று நினைக்கிறார்கள்.

உதாரனத்திற்க்கு நான் எடுத்த சர்வேயில் வெளிப்படையாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் தந்தை அவருக்கு பிறந்த பிள்ளைகள் 90% த்தினர் புகைப்பழக்கம் இல்லாமல் இருக்கின்றனர் ஏனெனில் அவர்களுடய தந்தையோ,தாயோ மகன் வெளியில் போகும் போது தப்புத்தண்டா பன்னாதே பீடி சிகரெட் பிடிக்காதே என்று அறிவுறுத்துவதில்லை. ஏனெனில் அந்த தகுதியை அவர்கள் இழந்துவிட்டு இருக்கிறார்கள் தாய் அல்லது தந்தை மீது வெறுப்பு உள்ளவருக்கு அவர்கள் கூறும் எதற்கும் எதிர்வினையாகவே செயலாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஒரு ஆசிரியர் மீது ஒரு மாணவனுக்கு கோபம் வந்தால் அந்த ஆசிரியரை கண்டாலே பிடிக்காமல் போய்விடுகிறது அவர்களுக்கு அந்த ஆசிரியர் நடத்தும் பாடத்தின் மீதும் வெறுப்பு வந்துவிடுகிறது அவர்கூறும் அறிவுறைகள்மீதும் வெறுப்பு ஏற்ப்பட்டுவிடுகிறது. அதனால் அந்த மாணவன் அந்த ஆசிரியர் மீது உள்ள வெறுப்பின் காரணமாக அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது அக்கறையின்றியும் படிக்காமலும் விட்டு விடுகிறான். அந்த மாணவனுக்கு என்னதான் சிறப்பான தங்கப்பதக்கம் பெற்ற ஆசிரியரிடம் தனி வகுப்புக்கு அனுப்பினாலும் அதில் முன்னேற்றம் அடைவது கடினமே.

எப்போதும் மாணவர்களை அடித்துக்கொண்டும் சதா திட்டிக்கொண்டும் அறிவுறுத்திக்கொண்டும் இருக்கும் ஆசிரியரின் மாணவர்கள் அந்த பாடத்தில் ஆர்வம் குன்றியே காணப்படுவார்கள் தேர்வு விழுக்காடும் குறைந்தும் இருக்கும். ஆசிரியர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்றால் நாம் இந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் நம்மை இவர்கள் கடவுள்போல் பாவிக்கவேண்டும் இந்தமாணவர்களுக்கெல்லாம் எதுவும் தெறியாது நாம்தாம் இவர்களுக்கு அறிவு வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம். ஆகையால் நாம் இந்த மாணவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற எண்ணம் ஏற்ப்பட்டுவிடுகிறது இந்த எண்ணத்தை மாணவர்கள் மீது வெளிப்படுத்துகிறார் அல்லது திணிக்க முயல்கின்றனர்.

இப்போது பள்ளியிலே பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் உயர்வு தாழ்வு ஏற்பட்டுவிடுகிறது அதுவும் பள்ளியிலே அனைத்து மாணவர்களின் நடுவே தனக்கு உறவினர்களின், நன்பர்களின், அல்லது பணக்காரன் பதவியில் இருப்போர் மகன்,மகள் மீது மட்டுமே நலம் விசாரிப்புச் செய்கிறார்கள் இவைகளெல்லாம் மாணவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறது அவர்களின் கல்வித்திறன் குறைவினையும் ஏற்படுத்துகிறது. அதிகப்படியான மாணவர்கள் ஆசிரியரைச் சாதாரண மனிதர்களைக்காட்டிலும் பய உணர்ச்சியுடனேப் பார்க்கின்றனர்.
குழந்தைகளை எடுதுக்கொள்வோம் விளையாடும் குழந்தையைப்பார்த்து விளையாடாதே போய் உக்கார்ந்து படி என்று கூறினோமானால் (அந்த குழந்தை பருவத்தில் நிறைய கற்க ஆசைப்படுகிறது புதிது புதிதாக ஏதோ மனம் தேட ஆசைப்படுகிறது அந்த குழந்தை விளையாட்டுக்களின் மீது புதிது புதிதாக ஏதோ பார்க்கிறது அனுபவிக்கிறது அப்போது இந்த புத்தகமெல்லாம் புத்தகத்தின் பக்கங்கள் எல்லாம் ஒரே காகிதமாகத்தான் தெறிகிறது அதை அப்படித்தான்பார்க்கிறது இந்தக்காகிதத்தையே நீண்ட நேரம் பார்த்துப் பார்த்து சலித்துவிடுகிறது. அந்தக் குழந்தைக்கு அப்போது எழுத்துக்கள் ஒரு சிக்கலான வடிவமாகவும் நினைவில் கொள்ளமுடியாத வடிவமாகவும் தெறிகிறது. அப்போது படங்களையும் வண்ண ஓவியங்களையும் பார்க்க அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படுகிறது புத்தகத்தை வாங்கி கொடுத்த புதிதில் அனைத்து பக்கங்களையும் ஆர்வமுடன் புரட்டிப் புரட்டிப் பார்க்கும். அந்தப் பருவத்தில் விளையாட்டு,இயர்க்கை,புதியபொருட்கள் ஆகியவற்றை விட அந்த புத்தகத்தில் உள்ள காகிதங்கள் அந்த வயதில் எதையும் போதிப்பதில்லை நாம் தான் புத்தகங்கள் குழந்தைகளுக்கு போதிப்பதாக எழுத்தையும் அதன் பயனையும் அறிந்த நாம் நினைக்கிறோம்) அதர்க்கு பிடித்தவைகளின் மீதெல்லாம் நாம் தடைபோட்டு நாம் கல்வியைத் தினிப்பதனால் அந்தக் குழந்தை படிப்பதை ஒரு தண்டனையாகத்தான் நினைக்கிறது.
இப்போது அலுவலகங்கள் பணியிடங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வோம் இங்குதான் மிகவும் மோசமான வேறுபட்டமனநிலைகள் குடியிருக்கும் வீடாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தன்பதவி அதர்க்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் தன்மையைச் சோதிக்க நினைக்கிறார்கள் ஒருவருக்கொருவர் சலைக்காமல் செயல்படுத்துகிறார்கள் மேல்மட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீதுபிரயோகிக்கிறான் ஒரே தகுதியில் இருப்பவர்கள்கூட தங்களில்யார் அதிகபலசாலி என்றும் நான் இல்லாமல் அவன் ஒன்றும் கிழிக்க முடியாது என்றெல்லாம் ஒரு அரசியல் நடந்து கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கும்போது அந்த அதிகாரத்திற்காக வேண்டுமானால் கீழ்படிந்துபோவார்களே தவிர அவர்கள் மனதிற்குள் ஒரு பெரிய எதிர்ப்பு வளர்ந்து கொண்டே இருக்கும் இவன்சொன்னா நாம்சரியாக செய்யனமாக்கும் என்று நினைத்துக்கொள்வார்கள் உதாரனத்திற்க்கு மேளாலர் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர் இல்லாத நேரங்களிளெல்லாம் நல்லா கும்மி அடித்துவிட்டு மேளாலர் வரும்போதுமட்டும் பவ்யமாக வேலை பார்ப்பதுபோல் பாவனை செய்வார்கள். இந்த அதிகார அந்தஸ்த்தில் இருப்பவர்கள் தங்கள் மேல் அழுத்தப்படுள்ள மன உளைச்சலை பனியாளர்கள்மீது வடிப்பதால் பனியாளர்களின் இயல்பான திறன் பாதிக்கப்படுகிறது.
மிகக்கொடியச் செயல் ஒன்று இருக்கிறது அதுதான் பதில்இல்லாத அல்லது பதில்அளிக்க இயலாத கேல்விகளை தெறிந்தேக் கேட்டு சங்கடத்திற்க்கு உள்ளாக்குவது அல்லது நாலுபேர் இருக்கும் போது கேட்டு அவமதித்து தன் அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டுவது. இது உடனே பகையாக மாறக்கூடிய ஒன்று, இவன் பட்ட சங்கடங்களை அவமானத்தைவிட இரண்டு மடங்கேனும் தன்னை அவமதித்தவனுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உக்கிரமாக வெளிப்படுகிறது. இது அந்த அலுவலகத்தையோ அல்லது வியாபாரத்தையோ உடனே பாதிக்கும் முறிக்கும் ஒரு பெரிய தன்மான செயலாக உருவெடுதுவிடும்.
உதாரணத்திற்குச் சிலவார்த்தைகள் அது முடிந்தசெயலுக்கு இருக்கும் பாதிப்பே அதிகம்யாரைக்கேட்டு உள்ளேவந்தாய், யாரைக்கேட்டுப் பயன்படுத்தினாய், யாரைகேட்டு கொடுத்தாய், நீ யாரு இதெல்லாம் செய்வதர்க்கு, இதைப்பற்றி உனக்கு என்னதெறியும், (கிடைக்காத உடைந்த பாழான சென்றுவிட்ட பொருட்க்களை) என்ன செய்வயோ ஏதுசெய்வாயோ தெறியாது இப்போதே எனக்கு அது வேண்டும், உணக்கு என்ன அருகதை இருக்கிறது இப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வேகமாக செயல் படக்கூடிய,மருந்துக்கு கட்டுப்படாத விஷமாக மனிதனின் மனதில் மாறிவிடுகிறது. சாலமன் பாப்பையா சாயலில் சொல்லவேண்டுமென்றால் "விடுங்கய்யா நானா அவனான்னு ஒரு கை பார்த்துடுரேன் என்வேலையே போனாலும்சரி என் சொத்தே அழிந்தாலும் சரி அவன ஒரு கைபார்க்காம விடமாட்டேன்'' இவைகள் எல்லாம் சொல்வன்மையின் மீதான வெளிப்பாடாக மாறி பதவி,வயது,இனம்,பால்,சொல்லும்நபர் ஆகியவற்றை பொருத்து உணர்வு வெளிப்படுதலின் அளவு மாறுபட்டிருக்கும்.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 5

மக்களிடத்தில் கல்வியும் வேலையும்.

இப்போதெல்லாம் நம் மக்களுக்கு கல்வி என்பதற்கு பொருள் ஆங்கிலத்தையும் தமிழையும் பார்த்து படிக்க எழுத தெரிந்தால் போதும் அடுத்து பாடபுத்தகத்தில் உள்ளதை அப்படியே தேர்வின் போது விடைத்தாளில் காப்பி செய்து அதிக மதிப்பெண்களை பெற்று கட் ஆப் மார்க்கில் பி.இ அல்லது எம்.பி.பி.எஸ் சேரவேண்டும். அங்கும் 4 ஆண்டோ இல்லை 6 ஆண்டோ ஓட்டிவிட்டு ஏதாவது ஒரு நிறுவனத்திலோ மருத்துவமனையிலோ வேலைக்கு அமர்ந்துவிட்டால் அத்துடன் கை நிறைய சம்பளம் வாங்கவேண்டும் இவ்வளவுதான். யார் எக்கேடு கெட்டால் என்ன எவன் செத்தால் நமக்கென்ன நம்ம வேலைபாக்குற நிறுவனம் லாபத்தில் இயங்கினால் என்ன நஷ்டத்தில் இயங்கினால் என்ன இப்படிதான் எல்லாரும் நினைக்கிறார்கள்.
நமது மக்களுக்கு தேவை பட்டம் அதை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் அரசு கல்லூரி இல்லை என்றால் தனியார்கல்லூரி காசுகொடுத்தால் சீட்டு கொடுக்கபோகிறார்கள். அடுத்து வாய் நிறைய ஆங்கிலம் பேசினால் முடிந்துவிட்டது அவ்வளவுதான் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மற்றபடி இவர்களுக்கு படித்ததைப்பற்றியெல்லாம் இப்போது கேட்டுப்பாருங்கள் ஒன்றும் தெரியாது அதெல்லாம் தேர்வு நேர்முகத்தேர்வோடு சரி பிறகுவந்து வேலைதெரிஞ்சவனிடத்திலும் அவனுக்கு கீழ்வேலை பாற்கும் பணியாளர்களிடத்தும் நச்சரிக்கவேண்டியது. அதிலும் இப்போது உள்ள எம்.பி.ஏ இந்த படிப்பினை படித்தவர்கள் அந்த நிறுவனத்தின் உற்பத்திபற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் கீழே வேலைபார்ப்பவர்களிடமும் உழைப்பவர்களின் ரத்தங்களை சுரண்டுவதும் எப்படி என்று படித்துவிட்டு வருகிறார்கள் ஐந்து பணியாளர்கள் வாங்கும் ஊதியத்தினை இந்த ஒரே நபர் வாங்குகிறார் இவர்களுடைய நோக்கம் எல்லாம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கு அவ்வளவுதான்மற்றவர்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை ஒருவர் செய்யும் வேலையை மேலாண்மை செய்வதற்கும் நிர்வாகம் செய்வதற்கும் எத்தனை பேர் அந்த கணக்குகளை மட்டும் பார்த்தாலே தெரியும்.

நம் மக்கள் பாடத்தினை படிப்பது இதற்கு மட்டும் தான் யாருக்காவது அறிவியலில் படித்த ஓம் விதியும் ஆர்க்கிமிடீஸ் விதியும் கார்னாட் இயந்திரமும் தெரியும் நினைத்துப்பாருங்கள். நாம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் எந்ததத்துவத்தில் செயலாற்றுகிறது என்று யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா இல்லை எவனோ வெளி நாட்டுக்காரன் கண்டுபிடித்தான் அவ்வளவுதான். யாரும் சிரமப்பட்டு வேர்வை சிந்தத் தேவையில்லை கொஞ்சம் உருப்படியாவாவது படிச்சதுக்கு சிந்திக்கலாம் இல்லையா. நிர்வாகம் செய்வதற்கு இவன் எதற்கு படித்துவிட்டு வரவேண்டும்நாட்டாமைகூடத்தான் நல்லா நிர்வாகம் பண்றாரு அவரு என்ன எம்.பி.ஏ வா படிச்சிட்டு வந்தாரு.


சிறிது காலத்திற்குமுன் எம்.எல்.எம் என்று கூறுவார்கள் மல்டிலெவல் மார்கெட்டிங் இது என்ன, ஊரில் உள்ள அனைவரையும் கூட்டி ஒருவர் பணத்தை ஒருவருக்கு கொடுத்து ஒருவன் அனைவர் பணத்திலும் பங்கு பெற்றுக்கொண்டு தெருத்தெருவாய் அலைந்து ஆள்பிடிப்பது. அப்போது என்ன கூறினார்கள் இதுதான் உலகிலேயே நிலைத்து நிற்க்ககூடிய வியாபாரமுறை இதைவைத்துதான் உலகமெல்லாம் பிற்க்காலத்தில் இயங்கப்போகிறது என்று கூறினார்கள். என்னையும் இரண்டு மூன்று மீட்டிங்குக்கு கூட்டி சென்றார்கள் நான் சொன்னேன் இதில் அடிப்படை சரியில்லை எனக்கு இது சரிப்பட்டுவராது விட்டுவிடுங்கள் என்று கூறினேன். மற்றவருக்கும் பரிந்துரைத்தேன் யாரும் செவி மடுத்ததாக தெரிய வில்லை என்ன ஆனது ஆம்வே என்ற நிறுவனம் எங்கள் தயாரிப்புகள் எம்.எல்.எம் மூலம் மட்டுமே கிடைக்கும் ஒரு போதும் பொதுச்சந்தை செய்யமாட்டோம் என்றது அந்த அமெரிக்க நிறுவனம் என்ன ஆனது இன்று தொ.கா. யிலே விளம்பரப்படுத்தி கடைகளில் விற்ப்பனை செய்கிறார்கள் அவர்களை நம்பி தெருத்தெருவாய் அலைந்தவன் கதியெல்லாம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 4

சொத்து பணம் சேர்க்கை

நம் இந்தியாவில் தான் சொத்தும் பணமும் சேர்ப்பதில் இத்தனை ஆர்வம் இன்றுமட்டுமே இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இன்றுவிட்டால் அடுத்து சம்பாதிக்க வாய்ப்பே வராதென்றும் இவர் பரம்பாரையிலே இவருக்கு மட்டும்தான் சம்பாதிக்கும் அக்கறை இருப்பது போலவும் அடுத்து வரும் சந்ததியினருக்கு சம்பாதிப்பது என்பதும் சொத்து என்பதும் என்னவென்றே தெரியாததுபோலவும் நினைத்துக்கொள்கிறார்கள். இப்படிப் பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் அடுத்தவனுடைய சொத்துக்களை அபகரித்தால் தான் நமக்கு சொத்து கிடைக்கும் அதற்கு அடுத்தவரையும் அடுத்தவர் சந்ததிகளையும் அழித்தால் சொத்தும் பணமும் வரும் என்றால் உடனே தன் சந்ததியை காப்பாற்ற அடுத்தவர்களையும் அடுத்தவர்களின் சந்ததி அழிப்பு வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

பணம் எதர்க்கு சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் நமக்கு கீழ் நிறைய பேர் நாம் அள்ளி இரைக்கும் சொற்ப பணத்திற்கு அலைந்துகொண்டு வேலை செய்ய சொல்மேல் ஓட ஆட்கள் இருக்கவேண்டும் என்றும். நாம் ஏதும் உழைக்கவோ வேலைசெய்யவோ கூடாது என்றும் நினைக்கிறார்கள் நாமும் நமது குடும்பமும் சந்ததிகளும் ஈரேழு பரம்பரைக்கும் உட்கார்ந்தே சாப்பிடும் அளவுக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் ஒரே நாளில் செலவழிக்கும் வகையில் விடுதிகளும் சூதாட்ட களங்களும் லட்சகணக்கில் பணம்கொடுத்து சல்லாபம் செய்ய நடிகைகளும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் ஈடுகட்டவேண்டும் என்றால் கணக்கில் அடங்கா பணம் சேர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக எண்ணுகிறார்கள். என்ன தான் பணத்தை பையிலே வைத்திருந்தாலும் நடுக்காட்டில் சிக்கிக்கொண்டால் பணத்தையா திண்ணமுடியும் இதை யாரும் யோசிப்பதில்லை அடுத்த மனிதன் பற்றியோ நிலைமை பற்றியோ யாரும் சிந்திப்பதே இல்லை வாழ்க்கை முழுவதும் பணம் பணம் என்றே ஒடிக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் சொத்து குவிப்பு தமிழகத்தின் பல இடங்களில் மின்னல் வேகத்தில் நடைபெற்றது மென்பொருள் பொறியாளர்கள் சிலர் சொத்துக்களை வாங்கவே திடீர் என்று ஒரு மாயை உருவானது இத்துடன் சொத்துக்களை வாங்கவே முடியாது மென்பொருள் துறையில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது இவர்களே சொத்துக்களை வளைத்துப்போட்டுவிடுவார்கள் என்று மக்கள் நினைத்துக்கொண்டார்கள். விளைவு உடனே யார் யார் எவ்வளவு பணத்தை முடக்கிவைத்திருந்தார்களோ அனைவரும் பணத்தினை நிலத்தின்மேல் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது தற்போதைய பங்குச்சந்தை இருபதாயிரம் புள்ளியைதொட ஓடியதே அது போல நிலத்தின் விலைமதிப்பு அவ்வளவு வேகமாக உயர்ந்தது எங்குபார்த்தாலும் நிலச்சந்தை தரகர்கள்தான் கோடிக்கணக்கில் பணம் பார்த்தனர்.

இந்த நேரத்தில் வயிற்றுவலிக்காரன் மட்டும் நிலங்களை விற்றான் மற்றவர்கள் விலை இன்னும் ஏறும் இன்னும் ஏறும் என்று வைத்திருந்தார்கள். இப்போது நிலம் வாங்கும் நபர்கள் எல்லாம் அதிக விலைகொடுத்து வாங்கி. இருந்த பணம் எல்லாம் தீர்ந்துவிட்டது. இப்போது நிலைமையோ வேறாகிவிட்டது விளை நிலங்களை வாங்கியவனும் விவசாயம் பார்ப்பதில்லை விவசாயம் பார்க்க நினைப்பவணும் நிலம் வாங்கமுடியாத அளவு விலை ஏறிவிட்டது ஓராண்டுக்கு முன் 500 ரூபாய் சென்ட் இருந்த நிலம் இன்று 10000 ரூபாவரை சென்றுவிட்டது 20 மடங்கு விலைஏற்றம். இனிமேல் அவசரத்துக்கு நிலம் விற்கவேண்டுமானாலும் வாங்க ஆளில்லை ஏறிய விலையை குறைத்து விற்க்கவும் யாருக்கும் மனம் இல்லை விவசாயம் செய்ய விருப்பம் இல்லாதவனும் நிலத்தினை விற்கப்போவது இல்லை.

அடுத்து இப்போது ஒரு பூகம்பம் வெடிக்க இருக்கிறது இப்போது சராசரி விலையாக சென்ட் 500 ரூபாய் அதிக பட்ச்சமாக விளை நிலங்களுக்கு அரசு நிர்னயித்துள்ளது ஆனால் இப்போதிய விளை நிலங்களின் மதிப்பு வேறாக இருக்கிறது சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக அரசு சில பணமுதலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தி தரப்போகிறது அரசு நிர்ணயிக்கும் விலையில். யாரும் குறைந்தவிலைக்கு நிலங்களை கொடுக்க தயாராக இருக்கப்போவதில்லை. நிலத்தை வாங்கியவர்களும் குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்து இருக்கிறார்கள். அரசியல் வாதிகளும் அரசும் வாக்கு கொடுத்தால் மாறாதவர்கள்போல் ஒரே நிலையில் நிற்ப்பார்கள். அடுத்து கொடுத்தவாக்கை காப்பாற்ற அரசு தன் பலத்தை விவசாயிகள்மீது பிரயோகப்படுத்தும் பிறகு வேறென்ன அடுத்த நந்திகிராம், சிங்கூர் பிரச்சினை தமிழகத்திலும் நடக்கும். கம்யூனிஸ்ட்டுகளே இவ்வளவு செய்யும் போது நாங்கள் என்ன சலைத்தவர்களா என்று அப்போது இருக்கும் அரசு எதுவாக இருந்தாலும் பிடிவாதமாக நிற்கப்போகிறது.

சொத்திலும் பணத்திலும் இவ்வளவு பிரச்சினைகளும் உணர்ச்சிகளும் உண்டு இவர்களின் மனநிலை எப்படி என்று குறுகியகாலத்திலேயே தெரிய வரும் அப்போது பார்க்கலாம்.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 3

கையூட்டு பற்றிய மக்களின் வெளிப்பாடு

கையூட்டுவாங்குதல் என்பதை மக்கள் ஒரு குற்றச்செயலாகவே கருதுவதில்லை மாறாக அது தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு மற்றோர் அங்கீகரிக்கப்பட்ட வழியாகவே நினைக்கிறார்கள் அதாவது அரசு கல்லூரியில் சீட்கிடைக்கவில்லை என்றால் தனியார் கல்லூரியில் சீட் வாங்குவது போலவே நினைக்கிறார்கள். கையூட்டு எதற்க்கு கொடுக்கிறார்கள் அடுத்தவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை தனக்கு கிடைக்கவேண்டும் என்பதாலோ அல்லது அடுத்தவர் வேலையையெல்லாம் விட்டுவிட்டு நம்முடைய வேலையை விரைவில் முடிக்கவேண்டும் என்றோ தனக்கு இல்லாத தகுதியை தகுதியுள்ளவையாக ஈடு செய்யவோதானே. நம் சமுதாயத்தில் கையூட்டு கொடுப்பவன் யாரும் குற்றமானவனாக கருதுவதில்லை கையூட்டு வாங்குபவனைதான் குற்றம் செய்பவனாக கருதுகிறார்கள். அரசு எதாவது ஒரு பணி நியமனம் செய்ய ஆரம்பித்தவுடன் ஏதோ பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் புதிய கிளை துவங்கினால் ஏறும் பங்கு விலை போல் காளைப் பாய்ச்சலில் பணி நியமனத்துக்கான லஞ்சத்தின் மதிப்பு எகிற ஆரம்பித்துவிடுகிறது.

எனக்குத்தெரிந்த ஒரு சில நிகழ்வுகள் ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் பணி நியமனத்துக்கு 30 லட்சம் வரையும் ஒரு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நியமனத்துக்கு 15 லட்சம் வரையும் சென்றிருக்கிறது அதாவது இந்த பணிகளுக்கு கையூட்டு வாங்குவதற்காகவே கையூட்டு கொடுத்து வேலைக்கு போகிறார்கள். இப்படி இவ்வளவு கையூட்டு கொடுத்து பணிக்குசென்ற பிரேக் இன்ஸ்பெக்ட்டர் பிரேக்கே பிடிக்கத்தெறியாதவனுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவார். இப்படி பயிற்சியே பெறாதவனுக்கு உரிமம் கிடைத்தால் ரோட்டில் போகும் எத்தனைபேரை வண்டி ஏற்றி கொள்வானோ! செத்தவனை எத்தனை லட்சம் கையூட்டு கொடுத்தால் பிழைக்க வைக்கமுடியும். கையூட்டு கொடுத்து வேலைக்கு வந்த சட்டம் ஒழுங்கு காவலர் கொடுத்த பணத்தை கையூட்டு வாங்கி சம்பாதிக்காமல் என்னசெய்வார். அப்போது சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவேண்டியவரே கையூட்டு வாங்கினால் சட்டம் எங்கே இருக்கிறது ஒழுங்கு எங்கே இருக்கிறது?

இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் கையூட்டு வாங்கியவன் ஏமாற்றாமல் வேலைவாங்கித்தற சட்டம் ஏதாவது வந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதை சட்டப்படி அங்கீகரித்து பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் இப்போது கையூட்டுப் பணத்தை ஜாய்ன்ட் அக்கவுண்ட்டில் போட்டு வேலை வாங்கித்தரும் நேர்மையான வியாபாரம் நடத்தும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் கையூட்டு கொடுத்து வாங்கிய வேலைக்கு கொடுத்தப்பணத்தை இன்னும் எப்போ சம்பாதிப்பது என்று ஒரு வியாபாரத்தில் சம்பாதிப்பது போலவே கையூட்டு வாங்குவதை கருதுகிறார்கள். கையூட்டு கொடுத்து ஒரு வேலை நடைபெறாமல் போனால் அவன் என்னை பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டான் என்று சொல்வார்கள்.

எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவன் தற்ப்போது நியமித்த அரசுப் பேருந்து நடத்துனர் பணிக்காக யாரோ ஒருவரிடத்தில் பணம் கொடுத்து இருந்தார் இபோது பணி நியமனமும் முடிந்து விட்டது இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. நியமனத்திற்கு முன்பு யாரிடம் பணம் கொடுத்தார் என்பதை கூட யார்கேட்டாலும் மாற்றி மாற்றி கூறிவந்தார் ஏன்? இந்த வேலை தனக்குமட்டுமே கிடைக்கவேண்டும் என்றுதானே. இப்போது வேலை கிடைக்காதபோது நான் இவனிடம் தான் பணம் கொடுத்தேன் இப்போது ஏமாற்றிவிட்டான் என்றுகூறுகிறார். இவர் என்னவோ யாரையும் ஏமாற்ற நினைக்காதவர் போல பேசுகிறார் வேலை கிடைத்திருந்தால் நான் எவனோ ஒருவனை ஏமாற்றிதான் இந்த வேலையை பெற்றேன் என்று சொல்வாரா. லஞ்சமே ஏமாற்ற கொடுக்கப்படுகிற பணம் அது நமது இல்லை என்று நினைத்துதான் கொடுக்கப்படுகிறது இப்போது ஏமாற்றப்பட்டுவிட்டேன் அந்தப்பணம் திரும்பவும் வேண்டும் என்றால் என்ன நியாயம்.

Sunday, January 20, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 2

நமது மக்களின் சாதிபேதங்கங்கள்

ஒவ்வொருவனும் தன் சாதி தன் மதம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறான். புராணங்களிலோ வேறு எதிலோ கூறப்பட்டுள்ள ஒரு சாதகமான கருத்தை வைத்துக்கொண்டும் தனக்கு கீழாக உள்ளஜாதிகளை மனதில்கொண்டும் தன் ஜாதியை உயர்வு பாராட்டுகிறான். தன்னுடைய ஜாதிக்காரர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். தனக்கு நிகரான பதவியோ அல்லது தனக்கு மேலான பதவியோ தனக்கு கீழுள்ள சாதிக்காரன் மதத்துக்காரன் வரும் போது ஏனோ அவன் மனம் ஏற்க்க மறுக்கிறது.

அவனை அந்த பதவியை அடையவிடமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன இருகிறதோ அனைத்தையும் பயன்படுத்துகிறான். அதே சமயத்தில் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரன் தகுதி குறைவாக இருப்பினும் அவனுக்கு கிடைக்க முயற்ச்சிக்கிறான். தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரனிடத்தில் பாராட்டு அல்லது முகஸ்துதியை விரும்புகிறான் அடுத்து தனக்கு நிகரான அதற்க்கு கீழ் உள்ள ஜாதிக்காரன் உயர்வதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் அவர்கள் மீது பழி சுமத்த ஏதாவது காரணம் தேடுகிறான். இது தான் ஜாதி வெறியாக பகையாக அவன் மனதில் தோன்றுகிறது.

தன் அருகில் உள்ள மக்களைப்பற்றி

தன் அருகில் உள்ளோர் எப்போதும் தன்னைவிட குறைவான சம்பலம் குறைவான வசதிவாய்ப்பு குறைவான பதவிகளையே வகிக்கவேண்டும் என்று நினைக்கிறான். தனக்கு கீழ் பனிபுரியும் ஒருவன் தனக்கு நிகரான பத்விக்கு வரும்போது அல்லது தனக்கு மேல் உள்ள பதவிக்கு போகும் போது அவன் அதை ஆட்சேபிக்கிறது. தகுதியும் திறமையும் இருப்பினும்கூட தன்னைவிட குறைந்த வயதுக்காரனின் கீழ் பனிபுரிய இவன் மனம் மருக்கிறது. தன் அருகில் உள்ளோர் தன்னைப்பற்றி பெருமை படவேண்டும் என்று நினைக்கிறான் தேவையே இல்லாத சம்பந்தம் இல்லாத வற்றை எல்லாம் உன்மையுடன் பொய்யும் சேர்த்து தற்ப்பெருமை படுகிறான். தான் அறிவாளி என்பதைவிட தனக்கு அருகில் இருப்பவன் முட்டாளாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறான்.

நாம் பிறற்மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் நமக்குகீழ் ஏவள் வேலை செய்ய ஆட்க்கள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். ஒரு பிச்சை காரன் கோடீஸ்வரன் ஆனாலும் அடுத்தபிச்சை காரர்கள் பிச்சை காரர்களாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான். தாழ்ந்தவன் உயர்ந்தவனாக அங்கீகரிக்கப்பட்டாலும் தனக்கு கீழ் தாழ்ந்தவர்கள் வேண்டும் என்றே நினைக்கிறான். பணக்காரன் மேன்மேலும் பணம் சேர்க்கவேண்டும் சொற்றுக்கே வழி இல்லாத எழையாக இருப்பினும் ஏழை ஏழையாகவே வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறான். எப்போதும் தன்னைப்பற்றி ஒருவன் புகழ்ந்துகொண்டே இருந்தால் அவனுக்கு இவன் அடிமையாகிவிடுகிறான் தன்னை புகழ்பவன் கூறும் எதையும் பொய்யாக இருப்பினும் நம்புகிறான் அதை மெய்யாக்க விரும்புகிறான்.

அடுத்தவனுக்கு கிடைக்கும் எதுவும் தன்னைவிட அதிகமாக அவனுக்கு கிடைக்கும் பட்ச்சத்தில் அவன் மனம் சஞ்சலப்படுகிறது உதாரணத்திற்க்கு ஒருவன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான் 1000 ரூபாய் சம்பலம் வாங்குகிறான் என்றுவைத்துக்கொள்ளுங்கள் தனக்கு 2000 ரூபாய் இன்க்ரிமென்ட் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறான் ஆனால் அந்னிறுவனம் 5000 ரூபாய் தருகிறது அப்போது அவன் மனம் மகிழ்ச்சி அடைகிறது. தன்னுடன் பனியாற்றும் சக பனியாளனை விசாரிக்கிறான் அப்போது அவனுக்கு 5500 ரூபாய் இன்க்ரிமென்ட் கொடுத்து இருப்பதாக சொல்கிறான் இப்போது 5000 ரூபாயில் வந்த சந்தோசம் மகிழ்ச்சி 500 ரூபாயில் தொலைந்து போய்விடுகிறது. ஒரு வேலை அடுத்தவனுக்கு 2000தான் இன்க்ரிமென்ட் என்றால் அதைப்பற்றி அவன் சட்டை செய்வதே இல்லை தனக்கு கிடைத்ததை வைத்து லேசாக மகிழ்ந்துகொள்வான்.

மூட நம்பிக்கை மீதான வெளிப்பாடு

ஆசைதான் ஒருவனை மூட நம்பிக்கைக்கு ஆட்ப்படுத்தும் முதல் காரணி ஒருவனை சாதாரணமாக போய் இதை செய் அதை செய் என்றால் செய்யமாட்டான். இப்படி செய்தால் உனக்கு இது கிடைக்கும் அது கிடைகும் என்று சொல்லும் போது குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது அல்லது சிரமப்படாமல் வேலை செய்யாமல் ஏதாவது கிடைக்கும் என்றால் அதை என்ன ஏதுவென்று கூட யோசிப்பது இல்லை இவன் அடுத்தவனையும் நம்பவைக்க முயற்ச்சிப்பான். இப்படித்தான் இவன் எல்லாரிடமும் ஏமாறுவதும் ஏமாந்த பின் மற்றவனை ஏமாற்ற முயல்வதும். இவன் எப்போதுமே ஒரு பாதுகாப்பிற்குள்ளே இருக்கவேண்டும் என நினைக்கிறான் எதிர்காலத்திற்க்கான நிரந்தர பாதுகாப்பைத் தேடுகிறான் இதற்க்கெல்லாம் உறுதி வழங்குவதாக கடவுளை நம்புகிறான். இவன் கடவுளையும் தன்னைப்போன்ற குணம் படைத்தவனாகவே கருதுகிறான் இவன் மற்றவர்களிடத்தில் என்ன எதிர்ப்பார்க்கிறானோ அதை கடவுளுக்கு செய்கிறான். உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருந்தால் இவன் செய்வதையெல்லாம் பார்த்து கை கொட்டி சிரிப்பார். கடவுளுக்கு முன் இவன் கோமாளியாக இருக்க ஆசைப்படுகிறான்.

தற்பெருமை படோடாபம் பற்றிய வெளிப்பாடு

தன் வீடுதான் ஊரிலேயே பெரிய வீடாக இருக்கவேண்டும் வெளியே பார்ப்பதற்கு அடுத்தவர் பொறாமைப்படுகிற அளவுக்கு இருக்கவேண்டும். என்னுடைய மகிழ்வுந்துதான் சிறந்த மாதிரியாக உயர்வான தயாரிப்பாக இருக்கவேண்டும் அடுத்தவரிடம் இதைப்போல் இருக்கக்கூடாது. கிலோ கணக்கில் நகை அணிந்து செல்ல வேண்டும் பார்ப்போர் எல்லாம் இன்னார் மனைவி இன்னார் மகள் இவ்வளவு நகை அணிந்து செல்கிறாள் என்று வியக்கவேண்டும். நம்ம குழந்தைமட்டும் எப்போதும் முதல் தரவரிசை மதிப்பெண் எடுக்கவேண்டும் பக்கத்து வீட்டுக்காரனிடம் என்குழந்தை முதல் தரவரிசை மதிப்பெண் பெற்றுள்ளது என்று சொல்லிக்கொள்ளவேண்டும்(எல்லா குழந்தையும் முதல் தரவரிசை மதிப்பெண் எடுக்கவேண்டுமானால் ஒரு வகுப்புக்கு ஒரு குழந்தைதான் படிக்கமுடியும்) தினமும் புதுப்புது ஆடை அணிய வேண்டும் பார்ப்பவர் என்ன இது புது உடையா என்று கேட்கணும். ஒரு பழமொழியே உண்டு குடிக்கிறது பழைய கஞ்சியாம் வீட்டுத்தோட்டத்தில வாழைஇலையில் விளக்கெண்ணை தடவி போடுவானாம். தனக்காக யாரும் வாழ்வதே இல்லை அடுத்தவங்க நம்மைப்பார்த்து ஏங்கனும் வீங்கனும் ஆச்சரியப்படனும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.

மக்களுக்குள் ஒப்பீடு செய்தல் நம்ம ஆளுங்ககிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் எதற்கெடுத்தாலும் அடுத்தவனை ஒப்பிட்டு பார்க்கிறது அவன் இவ்வளவு சம்பளம் வாங்குறானே, இவன் மனைவி இவ்வளவு அழகாக இருக்காளே, இவனுக்கு இத்தனை வீடு இருக்கே அவனுக்கு அதுக்குள்ள வேலை கிடைத்துவிட்டதே அவனுக்கு இவ்வளவு லாபம் வருதே இப்படி எல்லாம் ஒப்பிட்டு பார்ப்பதே வேலையாக போய்விட்டது அதுவும் ஒரு வேலைய செய்ய மட்டும் அவன் செய்யவில்லை நான் ஏன் செய்யவேண்டும் அவன் விடுப்பு எடுத்து வீட்டிலே மகிழ்ச்சியாக இருக்கிறான் நான் மட்டும் வேலை பார்க்க வேண்டுமா. ஏதோ நிதி வசூல்னு வச்சிக்கோங்க அடுத்தவன் ஏழை 10 ரூபா கொடுக்கிறான் இவன் கிட்ட பணம் இருந்தாலும் அவன் 10 ரூபாதான் கொடுத்தான் நான் ஏன் அதிகம் தரவேண்டும் என்று யோசிப்பான். எதற்கெடுத்தாலும் இப்படியே ஒப்பிட்டு பார்ப்பது எவனாவது அவனுக்கு 10 அப்பா இருக்கிறார்கள் எனக்கு 11 அப்பாவாவது இருக்கனும்னு ஒப்பீடு செய்து பார்ப்பானா

மக்களின் மனதில் அரசியல்

இதில் என்ன ஒரு பெரிய சங்கதி என்றால் ஒரு கட்சியை தன் சாதியைப்போலவே சேர்த்து பிடித்து வைத்திருக்கிறார்கள் அதில் என்ன நிறை என்ன குறை போன ஆட்சி எப்படி செய்தார்கள் என்று எதையும் பார்ப்பதில்லை. போராட்டம்னு சொன்ன உடனே தெருவில் இறங்கி கூச்சலிடவேண்டியது அந்த கட்சி தலைவர் எதை சொன்னாலும் அந்த கட்சியில் இருப்பவர்கள் யோசிப்பதே கிடையாது உடனே நம்பிடவேண்டியது. அடுத்து ஒரு சிலர் இருக்கிறார்கள் வெற்றிபெறுகிற கட்சிக்கு ஓட்டு போடுகிறவர்கள் இவர்களை நினைப்பது தான் சரி என்று வேறு நினைத்துக்கொண்டு ஒரு கட்சிகூட்டத்தையும் விடுவதில்லை ஏதோ திருவிழாவைப் போல் கொண்டாடுகிறார்கள். சிந்திப்பதா அந்த வார்த்ததைக்கு அர்த்தமே தெரியாது இவர்களுக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் எல்லோரும் செய்கிறார்கள் அதுதான் இப்படி என்று சொல்வார்கள். ஒரு எம்.பி.பி.எஸ் படிக்கிறவன் கூட அவர்களை எல்லாம் முதலில் கேளு அப்புறமா என்னை வந்து கேள் என்று இப்படிதான் பேசுகிறார்கள்.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 1

இப்போது நமது சமூகத்தில் பணக்காரன் ஏழை பிச்சைக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கொலைகாரன் கொள்ளைக்காரன் என பலதரப்பட்ட மக்கள் இது ஏன்?. அடுத்தவனைக்காட்டிலும் தான் உயர்வாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அது முதலில் தன் குடும்பத்திலேயே ஆரம்பமாகி விடுகிறது அனைவருக்கும் மற்றோர் எண்ணம், தாம் செய்வது தாம் சொல்வது தான் சரியாக இருக்கும் நடக்கவேண்டும் என்றும் சிலர் ஒரு படி மேலே போய் அது தவறாக இருந்து தவறு என தெரியும் பட்ச்சத்தில் தன் முழுபலத்தையும் பயன்படுத்தி அதுதான் சரி அதுதான் உண்மை என அடுத்தவரை நம்பவைப்பது.

ஒரு சிலர் இதர்க்காக விபரீதமான முடிவுகள் வரை எடுப்பர் தன் மனம் தான் சொல்வது செய்வது தவறு என்பதை ஏற்க்க மறுக்கிறது. தன் கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவரின் கருத்து தவறாகவே இருக்கவேண்டும் என நினைப்பது தன்னைவிட அறிவிலும் பனத்திலும் பலத்திலும் திறத்திலும் தன் அருகில் இருப்பவர் உயர்ந்து வரக்கூடது என்ற எண்ணம். இவை அனைத்தும் தனக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது தான் வெளிப்படும். இப்படி ஒட்டுமொத்தமாக சொன்னால் குழப்பமாக இருக்கும் எனவே தனித்தனியாக பட்டியலிடுவது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.
எதிர்பாலினத்தின் மீதான வெளிப்பாடு.

ஓர் ஆண் என்ன நினைக்கிறான் பெண்கள் தம்மைவிட அறிவும் திறமையும் குறைந்தவர்களாக கருதுகிறான் அடுத்து பெண் என்பவள் ஆணுக்கு அடிமையாக அல்லது கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று எண்ணுகிறான். பெண்ணும் அப்படித்தான் நினைக்கிறாள் ஆனால் காலம் அவளை செயல்பட முடியாமல் கட்டிப்போட்டிருக்கிறது. சிறிது வாய்ப்புகிடைக்கும் போது சீறிப்பாய்கிறாள் ஆனால் பெண்ணுக்குறிய ஒரே குறைபாடு ஆண்களைவிட உடல் அமைப்பு வலிமையில் குறைந்திருக்கிறாள் பிள்ளை பெறும் வேலைவேறு இருக்கிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் படிந்த பெண்ணை பாலியல் ரீதியாக உறவு கொள்ள மனைவி என்று வரும் போது (இது நம்மஊர் சமாச்சாரம்) அவளை ஒரு போகப்பொருளாக கருதுகிறான் அவள் தன்னிடம் மட்டும்தான் இன்பம் அனுபவிக்கவேண்டும் என்றும் தான் யாரிடம் வேண்டுமானாலும் இன்பம் பெறலாம் என்று நினைக்கிறான். பெண்ணும் தன் கணவன் தன்னிடம் மட்டுமே தான் இன்பம் பெறவேண்டும் என்றும் தாம் அடுத்தவருடன் போகலாமென்று நினைக்கிறாள்.

இந்த எதிர்ப்பார்ப்பில் இருவருக்குமே நியாயம் இல்லை ஆண்கள் எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும் உதாரணத்திற்க்கு நமீதாவோ இல்லை சிரேயாவோ தயார் இலவசம் என்று சொல்லட்டும் எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்வார்கள் இதற்க்கு முன் அவர்கள் எத்தனை பேருடன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார்கள். சூர்யாவும் சிம்புவும் ரெடினு சொன்னாலும் எல்லா பெண்களும் ஓகேனுதான் சொல்வாங்க ஆனா எத்தனை ஆண்கள் இதை ஒத்துக்கொள்வார்கள் உடனே கலாச்சாரம் அது இதுனு ஆரம்பித்துவிடுவார்கள். ( நமீதா,சிரேயா,சூர்யா,சிம்பு எல்லாம் என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கதான் இப்ப இண்டஸ்ட்ரீல ரொம்ப கிளாமரா இருக்கீங்க கண்டிப்பா எல்லாருக்கும் உங்கமேல ஆசை இருக்குமுனு ஒரு நம்பிக்கை)

ஆனால் யாரும் ஒன்றை சிந்திக்க மறந்து விடுகிறார்கள் தான் ஒரு பெண்ணை நாடும் போது அவள் அடுத்தவன் மனைவியோ அல்லது அடுத்தவனுக்கு மனைவி ஆகப்போகிறவளோ இப்படி ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்ச்சட்த்தில் தன் மனைவி மட்டும் யாரையும் நாடமாட்டாள் நாடியிருக்கமாட்டாள் என்பதில் என்ன நிச்சயம் இது அனைவருக்கும் முள்ளாக குத்தத்தான் செய்யும். இவன் நாடிப்போகும் பெண்கள் என்ன இயந்திரத்தாலா செய்தார்கள் அப்படி ஒன்றும் இல்லையே. ஒரு ஆண் தன்பலத்தால் செல்வாக்கால் தன்மனைவியை வீட்டுக்குள்ளே வைத்திருந்தாலும் இச்சை வந்துவிட்டால் வேலைக்காரனை இல்ல வாட்ச்மேனையோ நாடமாட்டாள் என்று என்ன நிச்சயம் மேலும் பெண்கள் காவலுக்கு வைத்தாலும் ஓரினச்சேர்க்கையாளாராக மாறமாட்டாள் என்று என்ன நிச்சயம்.

ஒரு பெண் தலைமை பொருப்பில் இருப்பதை எந்த ஒரு ஆணும் சுலபத்தில் ஏற்றுக்கொள்வதே இல்லை திருமணம் ஆனால் அந்த அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக்கோள்ள பார்க்கிறான். திருமணமாகாத பெண்கள்தான் அந்த பொருப்புகளை வகிக்கமுடிகிறது. இதில் பெண்களுக்கும் வசதியாக போய்விட்டது பொருப்பு ஆண்களிடம் சென்றுவிட்டது இனி தலைவலி இல்லை ஆண் சம்பாதிக்கப்போகிறான் பொருப்புகளை கவனிக்க போகிறான் நாம் அவன் நிழலிலே ஒன்றிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆண் தன் திறமையை நிரூபிக்கவும் தன் பொருப்புகளை கவனிக்கவும் அதிகபட்ச சிரமத்தை மேற்கொள்ள தயாராக இருக்கிறான் எதைவேண்டுமானாலும் செய்கிறான். பெண்கள் சிரமத்தை மேற்கொள்ள தயாராக இல்லை தனக்கு கிடைக்கும் சலுகைகளை பயன் படுத்திக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு ஆண்களை கவரும் ஒரு கவர்ச்சிப்பொருளாகவே இருக்கிறாள்.

திருமண விஷயதில் எடுத்துக்கொள்வோம் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கும் ஆண் வேலைக்கே போகாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வான். ஒரு வேலைக்கு போகும் பெண் கண்டிப்பாக தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் ஆணைத்தான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள். ஒரு படித்த பெண் தன்னை விட அதிகம் படித்த ஆணைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள் இதுதான் உண்மை வேண்டுமானால் திருமணத்தகவல் இணையதளத்தில் போய் பாருங்கள். பெண்கள் எப்போதுமே தன்னைவிட படிப்பிலும் சம்பளத்திலும் அதிகம் உள்ள ஆண்களை எதிர்ப்பார்க்கும் போது அந்த ஆண்கள் இந்த பெண்களை அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.

அடுத்து வரதட்சணை இது தான் அனைத்து இடங்களிலும் மிகவும் உணர்ச்சிகரமான சங்கதியாக பேசப்படும் ஒன்று இதுவரை ஒரே ஒரு புகாராவது திருமணம் ஆகாத ஆணின்மீது வரதட்சணை கேட்டதாக புகர் கொடுக்கப்படிருகிறதா? பணக்காரவீட்டுக் காதலனைத்தவிர. இப்ப எதுக்கு வரதட்சணை பற்றியெல்லாம் இந்த தலைப்புக்கு வருகிறது என்று கேட்கலாம் இதுக்கும் சம்பந்தம் இருக்கு. ஒருவர் தன் மகளுக்கு வரன் பார்க்கும் போது அரசாங்க உத்தியோகம் பார்கிறானா, தன்னைவிட பணக்காரனா, கை நிறைய சம்பாதிக்கிறானா, நிறைய படிச்சிருக்கானா அவனுக்கு நாம் வேலைவாங்கி கொடுத்துக்கலாம்(வேலை சூப்பர்மார்க்கட்ல விக்கறதா நெனப்பு) இப்படிதான் மாப்பிள்ளை பார்ப்பாங்க.

ஆனா இவரோட பெண்ணோ கொஞ்சம்தான் படிச்சிருக்கும் எங்கயும் வேலையும் செய்யாது இதலவேற சொல்லுவாறு பொண்ண உக்காரவச்சி சோறுபோடர மாப்பிள்ளையா பாருனு( இது என்ன பிராய்லர் கோழியா எந்த வேலையுமே வாங்காத முட்டகூட போடாத நேரா 45 நாள்ல வெட்டி எடைபோட). இவரோட பெண் காலம் முழுதும் சிரமப்படாமல் வச்சி காப்பாத்தனும்மாம்! இப்படி சொன்னா எவன் தான் வரதட்சணை கேக்கமாட்டான் பெண் பார்க்கும் போதும் சரி தரோம்முனு தலைய ஆட்டவேண்டியது அப்புறமா முடியலனு சொல்லும் போது பிரச்சினை ஆனா வரதட்சணை கொடுமையினு போலீஸ்ல கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது. இது வரைக்கும் கணவனைவிட அதிகா சம்பாதிக்கிற இல்ல கணவனோட வீட்டை விட வசதி அதிகம்படைத்த வீட்டுப்பெண் அல்லது வேலை செய்யாத கணவன் வேலைசெய்ர பொண்டாட்டிய வரதட்சணை கொடுமை பண்ணினதா ஏதாவது வழக்கு இருக்கிறதா?. ஏன் அதிகபட்சமாக திருமணமானால் பெண்கள் கணவன் வீட்டில் இருக்க ஆசைப்படுகிறார்கள். மனைவியின் வீட்டுக்கு கணவனை கூட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே. அப்பொழுது இந்த சிக்கலே வராது இல்லையா?

அடுத்து பொது இடங்களில் தர்ம அடி,பொதுமாத்து இதெல்லாம் பார்த்திருப்பீர்கள் இதில் அதிகமாக பெண்கள் விஷயமாகத்தான் இருக்கும்.அடிப்பதும் அடிவாங்குவதும் ஆண்களாகத்தான் இருக்கும். ஒரு ஆணை காம இச்சைக்காகவோ அல்லது காதலை சொல்லவோ அழைத்தால் அதை அருகில் இருப்பவர்களிடம் கூறினாலோ யாரும் கண்டுகொள்வதே இல்லை அவன் போனதும் பக்கத்தில் இருக்கிறவன் முயற்சிசெய்வான். இதே ஒரு ஆண் பெண்ணிடம் சொல்லும்போது அந்தப்பெண் சொல்லிமுடிப்பதற்க்குள் அடிக்க ஆரம்பித்துவிட்டு இருப்பார்கள் ஏன் இந்த மன நிலை என்று நீங்கள் யோசித்திருப்பீர்களா.

அதிகமாக வெளியில் நடமாடுபவர்கள் ஆண்கள்தான் அவர்களுக்கு ஒரு எண்ணம் அடுத்தவனுக்கு அந்த பெண்கிடைக்கக்கூடாது அடுத்தவன் சந்தோஷமாக இருக்ககூடாது என்ற எண்ணம் ஒரு நொடிப்பொழுதில் அவனுக்கு உண்டாகிவிடுகிறது. உடனே அதனை அவன்மீது வெளிப்படுத்துகிறான். அப்படி அடிக்கிற எவனுக்கும் காம எண்ணம் இல்லை என்று நினைக்காதீர்கள் அவர்கள் மனதில் தான் காம எண்ணம் வக்கிரமாக இருக்கும். அவ்வளவு சீக்கிரம் எந்த பெண்ணும் அடிக்க போவதில்லை ஒரு சிலர் அடுத்தவர் மெச்ச அல்லது என்னை விட்டு அவளபோய் கூப்பிட்டயேனு வேணும்னா அடிக்கலாம். ஆனால் பெண்களை யாரும் இந்த இடத்தில் கண்டிப்பதே இல்லை மற்ற பெண்களும் எப்படியும் மற்ற ஆண்கள் சிபாரிசுக்கு வரமாட்டாங்க நாம் ஏன் வீணா இவகூட சண்டைபோடனும்னு நினைத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

Sunday, January 13, 2008

பொங்கல் வாழ்த்து




பதிவர் பெருமக்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Monday, January 7, 2008

டேய் என் அக்காவை யாரும் லவ்பன்னாதிங்கடா நான் சொல்லுரவன் மட்டும்தான் அவகூட

நம் நாட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் குற்றவாளிகளா? ஆண்களால் பெண்களுக்கு ஆபத்தா! இப்படி எல்லாம் சொல்வதற்க்கு நமக்கு வெட்ககேடாய் இருக்கிறது. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதால் மட்டும்தான் ஆண்கள் பெண்களை யூடீசிங் செய்கிறார்களா அதற்க்குக் காரணம் உடை அல்ல அவர்களின் மனது பலவீனமாக இருப்பதுதான். கவர்ச்சி என்றால் அடுத்தவரைக் கவர்ந்து இழுப்பது என்றுதானே அர்த்தம் யாரைக் கவரவேண்டுமோ அவர்களை மட்டும் கவருங்களேன் ஏன் அனைவரையும் கவரவேண்டும். வீட்டுக்கு வெள்ளை அடிக்காதீர்கள் வெள்ளையடித்தால் சும்மா இருப்பவன் திருடனாகிவிடுவான் வந்து அனைத்தையும் திருடிக்கொண்டு சென்றுவிடுவான் என்கிறார்கள் வெள்ளையடிக்கச் சுவரே இல்லாதவன் கொள்ளையடிக்கத்தான் செய்வான்.

மனிதனுக்கு ஆறு அறிவு இருப்பதால் அவன் இயந்திரம் ஆகிவிடமுடியுமா அவனுக்கு உணர்ச்சிகள் ஏதும் கிடையாதா இதெற்கெல்லாம் காரணம் சமூகமும் அரசும்தான். அவன்கூட பேசாத இவன்கூட சுத்தாத என்று கட்டுப்படுத்தும் குடும்பமும் லாட்ஜ் ஹோட்டல் என்று ரெய்டு செய்யும் கலாச்சார காவல்துறையும்தான். மழைபெய்து அந்த மழைநீரானது தன் தடம் வழியே பள்ளம் எங்கிருக்கிறதோ அங்கு சென்றுகொண்டுதான் இருக்கும் அதனை தடுத்து அணைகட்டினால்தான் ஆபத்து. நீரின் அளவு உயர்ந்து கொண்டே இருக்கும்போது கரைகள் எங்கு பலவீனமாக இருக்கிறதோ அங்கு உடைப்பெடுக்கதான் செய்யும். அதன் ஆபத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள இரண்டு வழிகள்தான் உண்டு ஒன்று அணையின் நீரைத் தடத்தின் வழியே திறந்துவிடவேண்டும் அல்லது கரையினை பலப்படுத்தவேண்டும்.

வெளி நாடுகளில் எல்லாம் இப்படியா நடக்கிறது என்று கூருகிறவர்கள் சற்று ஆழ்ந்து யோசிக்கவேண்டும் இந்தியாவைவிட அரபு நாடுகளில் மிகக்கொடுமையான வன்புணர்வுகள் நடக்கத்தான் செய்கிறது. அங்கு பெண்கள் கவர்ச்சியான ஆடையெல்லாம் அனிந்து செல்வதில்லை சட்டங்களும் கடுமையாகத்தான் இருக்கிறது மேலும் இந்தியா அளவிற்க்கு பெண்களுக்கு சுதந்திரமும் இல்லை இருப்பினும் ஏன் அப்படி நடக்கிறது. எந்த அளவுக்கு காமத்தை கட்டுபடுத்த முயர்ச்சிக்கிறோமோ அந்த அளவுக்கு அது கட்டுடைந்து செல்ல முயர்ச்சிக்கும். குற்றங்களின் எண்ணிக்கையை விகிதாச்சார அடிப்படையில் அடுத்த நாட்டுடன் ஒப்பீடுசெய்பவர்கள் அந்த நாட்டு மக்கள்தொகையையும் நிலப்பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். நம் நாட்டிலே முத்தின கத்தரிக்காய் விலைபோவதில்லை வெளி நாட்டில் வத்தல்போட்டாவது விற்றுவிடுவார்கள்.

பசியோடு இருப்பவனுக்கு அருகில் ஒருவன் பால்பாய்சம் சாப்பிட்டுவிட்டு புளியாப்பம் விட்டால் பசித்திருப்பவனின் மனனிலையைக் கொஞ்சம் யோசித்துப்பார்க்கவேண்டும். விபரீதத்தைப் பற்றி சிந்திப்பவன் பொருமையாக இருப்பான் சிந்திக்காதவன் அல்லது துனிந்தவன் எடுத்துபருகத்தான் செய்வான். அழகாய் இருக்கும் பெண்களைப்பார்த்து ஆண்களின் மனதில் சலணம் ஏற்ப்படாமல் இருக்குமானால் இன்று சினிமாவில் இத்தனை அழகான நடிகைகளுக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கும் என்ன வேலை இருக்கிறது. வெளியே வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் எனக்கு நிர்வாணப்படம் பார்த்தாலும் எந்த உணர்ச்சியும் ஏற்ப்படாது நான் ராமனின் அவதார ஆண்மகன் என்று. இந்த கலாச்சாரம் கசுமாலம் எல்லாம் பசிக்கும் போது ஒருபிடி சோத்துக்குக்கூட வழிசெய்யாது யாரோ ஒருசிலர் மட்டும் அதவச்சி நல்லா சாப்பிடலாம். பசிதீர்ந்த புலி மான் அருகிலே இருந்தாலும் அடிப்பதில்லை "புலிக்கு மான் பலியாவதில்லை புலியின் பசிக்குத்தான் மான் இரையாகிறது".