Thursday, January 24, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது நிஜம் 8

அராசாங்கம் பற்றிய மக்களின் மனநிலை.

மக்கள் எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு அரசே காரனம் என்றும் மேலும் அரசேப் பொருப்பேர்க்கவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சாலையோரத்தில் குடியிருப்பவன் முதல் பெரியப் பணக்காரர்கள் வறை இதைத்தான் சொல்லுகிறார்கள். குடிக்கின்ற தண்ணீர் முதல் புதைக்கின்ற இடுகாடு வரை எதற்கெடுத்தாலும் பிரச்சனைகள் இந்த அரசின் ஆட்சியில் இதுசரியில்லை அதுசரியில்லை முழுசுதந்திரமில்லை பாதுகாப்பில்லை என்கிறார்கள். முதலில் முழு சுதந்திரம் என்றால் என்ன முழுபாதுகாப்பு என்றால் என்ன என்று யாரும் சிந்தித்து பார்க்கும் மனநிலையில் இல்லை.

ஒருவனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டுமானால் அவனை அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்தகூடாது அப்படியானால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செயாமலும் இருக்கலாம் அது அவன் விருப்பமாக இருக்கும். கொலை செய்தாலும் திருடினாலும் அடித்தாலும் ஏனென்று யாரும் கேட்க்கமுடியாத நிலைதான் முழுசுதந்திரம்.
அடுத்து முழு பாதுகாப்பு ஒருவனுக்கு வழங்கவேண்டுமானால் அவன் முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் குடிக்கும் தண்ணீர் முதல் படுக்கும் படுக்கைவரை என்ன தேவையானாலும் எதை செய்யவேண்டுமானாலும் அரசின் வழிகாட்டுதலில் இருந்து ஒரு இழையும் பிசகாமல் இருக்கவேண்டும் அப்போதுதான் முழு பாதுகாப்புக் கிடைக்கும். இப்போது இவையிரண்டும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்றவை ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் பார்க்கமுடியும் இரண்டையும் ஒருசேரப்பார்ப்பது இயலாத காரியம். சிலர் கேட்கலாம் கண்ணாடியில் பார்க்கலாம் என்று கண்ணாடியில் தோன்றுவது மாயபிம்பம்தானே அப்படியானால் நீங்களும் அவ்வாழ்க்கையை கணவினில் மட்டுமே அனுபவிக்கமுடியும் உண்மையில் அல்ல.

இப்போது நமக்கு எதுதேவை சுதந்திரமா இல்லை பாதுகாப்பா ஒருவேலை இரண்டும் தேவை எனில் 50% சுதந்திரம் 50% பாதுகாப்பு என வைத்துக்கொள்வோமா. அப்படியெனில் நாணயத்தை செங்குத்தாக வைத்துப்பார்ப்பதை போன்றுதான் இருக்கும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லை சுதந்திரமாக இருக்கிறோம என்று நமக்கேத் தெரியாது அதனை புரிந்துகொள்ளவே சிக்கலாக இருக்கும். இந்த நாணயம் லேசாக ஒருபுறம் சாய்ந்திருந்தாலும் ஒருப்பக்கம் தெரியும் மறுப்பக்கம் தெரியாது இதனை அவரவர் முடிவுக்கே விட்டுவிட்டாலும் எது எத்தனைசதம் வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனப்பார்ப்போம். உணக்கு துப்பாக்கி வைத்திருக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு உணதுபாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் என்றால் வடிவேல் சொல்வதுபோல் " இது சின்ன பிள்ளத்தனமா இல்ல இருக்கு ".

இப்போது நம்மிடமுள்ள முரண்பாடுகளைப் பார்ப்போம் ஒருவன் மற்றொருவனை அடித்தால் அடிவாங்கியவன் பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா. சரி அடிவாங்கியவன் பாதுகாப்பாக இல்லை என்று கூறினால் ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தையை அடித்தால் அது பாதுகாப்பா இல்லையா என்றால் ஆமென்பர். இது தான் அந்த பெரிய முரண்பாடு நான் பெற்றக்குழந்தை அதற்கு அனைத்து செலவினங்களையும் சலுகைகளையும் அளிக்கும் நான் அந்தக் குழந்தையை அடிக்க உரிமையுண்டு என்றால். உங்களைப் பாதுகாத்து உங்களுக்குத் தேவையான வற்றையெல்லாம் கொடுக்கும் அரசு உங்களை அலைகழிக்கடித்தால் நீங்கள் என்னசொல்வீர்கள் அரசு என்னை அடிமையாக நடத்துகிறது என்றுதானே. அப்படி இருக்கையில் உங்கள்குழந்தையை மட்டும் நீங்கள் அடிமையாக நடத்துகிறீர்கள் என்றுதானே அர்த்தம் நீங்கள் அடிக்கும்போது குழந்தைகளுக்கு என்ன சுகமாகவா இருக்கும். இது என் சுதந்திரம் என்றால் குழந்தைகளின் சுதந்திரம் என்ன ஆணது அந்தக் குழந்தை எந்த உடை உடுத்தவேண்டும் என்னப்படிக்கவேண்டும் என்னச்சாப்பிடவேண்டும் யாரைத் திருமணம் செய்துக்கொள்வது என்பதுவரை உங்களுக்கு பிடித்தவற்றையே பிள்ளைகள் மீது தினித்தால் அந்த இளம் பிஞ்சுகளின் கணவு அடியோடு பழாய்போய்விடுகிறது. அவர்களுக்கு உலகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்று அவர்களுக்கு எதையும் தெரிந்துகொள்ளவிடாமலே செய்துவிடுகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் செய்து விட்டு அரசாங்கம் சரியில்லை என்பது நாமும் அரசாங்கத்தின் ஒரு அங்கம் தானே நாம் சரியாக இருக்கிறோமா இல்லை. தாங்கள் விருப்பப்பட்ட படிப்புகளை அரசினர் கல்லூரிகளில் சீட் இல்லை என்றாலும் தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்கவைத்துவிட்டு அந்த படிப்பிற்க்கு தகுதியான வேலைவாய்ப்பினை அரசு ஏற்ப்படுத்தி தரவேண்டுமாம். இந்து இடுக்கு பொறம்போகு போன்ற வசதியற்ற இடங்களில் வீடுகளை கட்டிக்கொண்டு அரசு சரியான வசதி செய்து தரவில்லை குடி நீர் வசதியில்லை சாக்கடை வசதி இல்லை என்று சொல்வது முடியாது என்றாலும் லஞ்சம் கொடுத்தாவது அதை சாதித்துவிடுவது என்னே சாதனை. எல்லாரும் நகரங்களை நோக்கி குடியேறிவிட்டு நெறிசல் பற்றாகுறை மாசு பட்டுவிட்டது என்று அரசினை கடிந்து கொல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது.

சாலை நெறிசல் கட்டிடங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தவும் மக்கள் விடமாட்டார்கள் எத்தனைபேர் ரோட்டில் அடிபட்டு செத்தாலும் பரவாயில்லை நடுரோட்டில் இருக்கும் கோவில்களை அகற்றகூடாது மசூதிகளை அகற்றகூடாது என்றால் ஓட்டுவாங்கியதற்க்காக அமைச்சர்களின் தலைமீதா வாகணத்தை ஓட்டுவது அரசு என்றால் அலாவுதீனின் அடிமை பூதம் என்று நினைக்கிறார்கள் கேட்டதெல்லாம் கொடுக்க. நீங்கள் கேட்ப்பதெல்லாம் வெளிநாட்டில் இருந்து பெறவேண்டுமானால் நமது நாட்டை உலகவங்கியில் அடகுவைத்துதான் பெறமுடியும் அதற்கு ஈடாக உலகவங்கியும் சேர்ந்து நமது நாட்டை ஆட்ச்சி செய்கிறது நமக்குதேவயானவற்றை நாமே செய்துகொண்டால் நமக்கேன் இந்த பிரச்சனை.

No comments:

Post a Comment