Tuesday, March 12, 2013

பிரபஞ்ச சக்தி மூலமாக புளியோதரை செய்வது எப்படி?

      பிரபஞ்சம் என்பது அளவற்ற ஆற்றல் உடையது இந்த பிரபஞ்சத்தின் சக்தியை நாம் முறையாக பயன்படுத்தினோமானால் வாழ்வில் எண்ணற்ற சாதனைகளை படைக்கலாம். இந்த சக்தியை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்திக்கொண்டு இந்த உலகையே ஆளமுடியும் என்பதனை எமது வல்லுனர் குழுவானது தேர்ந்த அறிவியல் மற்றும் ஆண்மீக ஞானத்தின் மூலம் கண்டறிந்துள்ளது.

     நாம் உயிர்வாழ ஐம்பூதங்கள் என்று சொல்லப்படும் நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும்  ஆகாயம் இவைகளே அவசியமாகும். இதில் முதல் நான்கை நாம் எந்த முயற்ச்சியும் இல்லாமல் பெற்றுவிடுகிறோம். பஞ்ச பூதங்களில் வானம் அல்லது ஆகாயம் என்று சொல்லகூடியது தான் பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தைபற்றி இன்னும் தெளிவா புரிந்துகொள்ளவேண்டும் எனில் கையில் இருக்கும் ரிமோட்டை எடுத்து Discovery சேனலுக்கு மாத்துங்க. தொடர்ந்து டிஸ்கவரி சேனலை ஒரு மாதம் பார்த்தீர்களானல் என்றாவது ஒரு நாள் Stephen Hawkins  புரோகிராம் போடுவாங்க அதை பார்த்து தெறிந்து கொள்ளலாம்.

     ஒருவேளை உங்களுக்கு சரியான நேரத்தையும் புரோகிராமோட பெயரையும் தெறிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு எங்களுக்கு ஒரு 10 பவுண்டு கட்டனமாக செலுத்தவேண்டும். அப்படி செலுத்தினால் உங்களுக்கு பதிலாக நாங்களே ஒரு மாதம் டிஸ்கவரி சேனல் பார்த்துவிட்டு புரோகிராம் போடும்போது உங்களுக்கு SMS அனுப்புவோம்.

    இப்போது பிரபஞ்சம் என்றால் என்னவென்று தெறிந்துகொண்டீர்கள் அடுத்து அதை பயன்படுத்துவதற்கான முதல் படியை பார்ப்போம். நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று உணவு, உணவு இருந்தால் தான் உயிர்வாழமுடியும் எனவே அந்த உணவிற்க்கு பிரபஞ்ச சக்தியை ஊட்டமேற்றவேண்டும் அதன் பிறகு அதை நம் வாய்க்கு ஊட்டவேண்டும். நாம் பிரதானமாக சாப்பிடும் உணவு அரிசி சாதம்  எனவே அந்த அரிசிக்கு பிரபஞ்ச சக்தியை அளிப்பது எப்படி என்று பார்ப்போம்..

        சக்தியளிக்கப்பட்ட அரிசியை சமைத்து அதனை கெடாமல் பாதுகாக்க வேண்டும். அரிசி சமைத்தவுடன் சோறாகிவிடும் சோறு சீக்கிரம் கெட்டுவிடும் எனவே அதனை புளியோதரையாக செய்து வைத்துவிட்டோமானால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். பிரபஞ்ச சக்தியினால் சக்தியூட்டப்பட்ட அரிசியானது நீங்கள் மேலே படத்தில் பார்ததில் தெறிகிறதா அப்படித்தான் வண்ணமயமாக இருக்கும் இந்த வண்ணமயமான சக்தியூட்டப்பட்ட அரிசியினை உணவாக உட்கொள்ளும்போது நமது வாழ்வே ஒரு வண்ணமயமான உலகத்திற்குள் வந்தடையும்.

     நீங்கள் அரிசிக்கு எப்படி பிரபஞ்ச சக்தியை அளிப்பது என்று தெறிந்து கொள்ளவேண்டுமானல் நாங்கள் வழங்கும் பயிற்சியையும் கையேடுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இதற்கான முன்பதிவு கட்டனமாக 111 பவுண்டை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று எமது வங்கிகனக்கில் செலுத்தி பரிவர்த்தனை எண்ணை மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். வங்கி கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை மார்ச் 31ஆம் தேதி இதே பதிவில் பின்னூட்டத்தில் தெறிவிக்கப்படும்.

2 comments:

  1. http://nilacharal.blogspot.in/2013/03/blog-post.html


    ha ha,

    Really a good one. These people need information age machines to write misinformation. Is there any way to sue these people ?

    ReplyDelete
  2. நமது மக்கள் இப்படி யாரிடமும் பணம் கொடுத்து ஏமாந்துவிடக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். இதில் யாராவது நம்ம பதிவர்கள் பணம் செலுத்தி ஏமாந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.

    ReplyDelete