Friday, January 4, 2013

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குற்றம் செய்ய வாய்பளிக்கவேண்டும்.

        தினந்தோறும் பெண்கள் அணுபவிக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் அதைப்பற்றி எழுதும் பதிவுகளுக்கும் பஞ்சமே இல்லை ஆனால் இதுவரை யாருக்கும் ஒரு தெளிவான முடிவும் கிடைக்கவில்லை.


படம்:- நன்றி நெய்தல் வலைத்தளம்.

      ஆளாலுக்கு காமெடி செய்வதும் வசைபாடுவதையும் கண்டுவந்தோம். மரண தண்டனை , ரசாயன காயடிப்பு, உறுப்பை துண்டிப்பது என தண்டனைகளை பரிந்துரைப்பவர்கள் ஒரு புறம் இரும்பு ஜட்டி அனிவிப்பது கடல் கொல்லையர் உடை அனிவது பர்தா அனிவது என பல காமெடிகள் ஒருபுறம்.இதற்கிடையில் பல்வேறு நாட்டு மற்றும் காட்டு சமூக மக்களின்    வாழ்க்கையை ஒப்பிடுவது ஒரு புறம்.

      ஒரு வருக்கு தண்டனை கொடுப்பதாலோ அல்லது பெண்களை முழுதுமாக போர்த்தி மூடிவிடுவதாலோ எதையும் தடுத்துவிடமுடியாது. அனைத்து வயது பெண்களும் அணைத்து வாழ்க்கை தரங்களில் மதங்களில் உள்ள பெண்களும் இந்த கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.அதே போல் குற்றவாளிகளும் அணைத்து வயது மதம் தகுதி தரத்திலும் எங்கும் நிறைந்துள்ளனர். அதில் சிலர் குற்றம் செய்தவர் பலர் வாய்ப்பு கிடைக்காத்தால் எதிர்  நோக்கியிருக்கும் எதிர்கால குற்றவாளிகள்.

    இப்போது நாம் எதிர்கால குற்றவாளிகளை எப்படி இணம்காண்பது    எதிர்கால குற்றங்களை எப்படி தடுப்பது என்றே யோசிக்கவேண்டும். குற்றவாளிகளை குற்றம் செய்வதற்கு முன்னரே குற்றவாலிகளை இணம் கண்டு அவர்களுக்கு சிறைதண்டனை அளிக்கவேண்டும். அதாவது குற்றவாளிகளை பொறி வைத்து பிடிக்கவேண்டும்.

     இதில் என்னுடைய மனதில் உதித்த ஒரு நல்ல வழிமுறையை நான் பகிர்ந்துகொள்கிறேன். இது சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது எனினும் இதுவே சிறந்த வழியாகும் இதன்மூலம் 80% குற்றங்களை கண்டிப்பாக குறைத்துவிடமுடியும்.

   அரசு ஒரு ஆய்வுக்குழுவை நியமிக்கவேண்டும் அந்த ஆய்வுக்குழுவானது சிறையில் உள்ள பாலியல் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளிடம் ஆய்வினை மேற்கொள்ளவேண்டும். இந்த ஆய்வாணது வயது, குற்றம், கல்வி, உறவு முறை என பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யவேண்டும். ஆய்வுகளின் முடிவில் வகைப்பாட்டு அடிப்படையில் குற்றம் செய்வதற்கான காரணிகளையும் வகைப்படுத்தவேண்டும். 

    இப்போது அந்த ஆய்வுக்குழுவுக்கு எந்தெந்த சூழலில் வாய்ப்பு கிடைக்கும்போது யார் யார் எல்லாம் குற்றம் செய்யக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் என அறிந்துகொள்ளமுடியும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயற்குழுக்கள் அதாவது பொறிவைத்து பிடிக்கும் குழுக்களை அமைக்கவேண்டும்.

   பொறி வைத்து பிடிக்கும் குழுவில் பொறிகளாக குடும்ப சுழல் காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தலாம் அது அவர்களுக்கு ஒரு மறு வாழ்வாகவும் அமையலாம். அடுத்து ஏற்கணவே பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்து யாரும் பாதிக்கப்படாமல் காக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்கள், தன்னார்வ தொண்டர்களையும் பயன் படுத்தலாம்.

   குற்றவாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி பொறியில் சிக்குவதை முழுதும் கானொலி பதியவேண்டும் சிக்கியவர்களை கற்பழிக்க முயன்ற குற்றத்தின் பேரில் கைது செய்யலாம். ஆதாரமாக கானொலியை பயன்படுத்தலாம். மேலும் வீடு மற்றும் அலுவலகங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கான அறிகுறிகள் இருப்பதை உணர்வார்களாயின் அவர்களும் காவல் துறையின் உதவியை நாடி தானே பொறியாக இருந்து பாதுகாப்புடன் வாய்ப்பினை ஏற்படுத்தி குற்றவாளியை கையும் கலவுமாக பிடிக்கலாம்.

   குறுகிய காலத்தில் குற்றம் செய்ய நினைப்பவர்கள் எல்லாம் சரியா பொறியா எனத்தெறியாமல் குழம்பி பயந்து வாய்ப்பு கிடைத்தாலும் குற்றம் செய்யமாட்டார்கள். யார் யார் எல்லாம் எந்தெந்த குற்றங்களை செய்ய வாய்ப்புள்ளவர்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment